Dailyhunt
மர்மமான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் அகோரிகள்!

மர்மமான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் அகோரிகள்!

Kalki Online 1 year ago

கோரிகள், சிவபெருமானின் தீவிர பக்தர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் முதன்மையாக கபாலிகர் மரபைப் பின்பற்றுகிறார்கள்.

அதனால்தான் அவர்கள் பெரும்பாலும் கபாலம் என்று அழைக்கப்படும் மண்டை ஓட்டுடன் காணப்படுகிறார்கள். 'அகோரி' என்ற சொல் 'அகோர்' என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானது. அதாவது, அச்சமற்றவர் என்று இதற்கு அர்த்தம்.

சிவனை தவிர, அகோரிகள் சக்தியின் உக்கிர வடிவமான காளியை வழிபடுவதாகவும் அறியப்படுகிறது. அகோரிகள் தங்கள் உடலை சாம்பலால் மூடிக்கொள்கிறார்கள், ருத்ராட்ச மாலைகளை அணிகிறார்கள். மேலும், மண்டை ஓடுகளை தங்கள் உடையில் அவசியம் சேர்த்துக்கொள்கிறார்கள்.

அகோரிகளின் தோற்றம்: அகோரிகளின் தோற்றம் மறைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அவர்கள் ஒரு ரகசியமான மற்றும் புரிந்துகொள்ள முடியாத குழுவாக இருந்தனர். இருப்பினும், சில அறிஞர்கள் தங்கள் வேர்களை கி.பி. 7 மற்றும் 8ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தோன்றிய இந்து மதத்தின் பண்டைய கபாலிகா மற்றும் காளாமுக பிரிவுகளில் காணலாம்.

கோயில் சம்பந்தமான கனவுகளின் பலன்கள்!

இந்தப் பிரிவுகள் கடுமையான தெய்வங்களை வணங்குதல், போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் தியாகச் சடங்குகளைச் செய்தல் போன்ற தீவிரமான மற்றும் தாந்த்ரீக நடைமுறைகளுக்கு பெயர் பெற்றவை. காலப்போக்கில், இந்தப் பிரிவுகள் ஒன்றிணைந்து அகோரி பாரம்பரியமாக பரிணமித்தன.

அகோரிகளின் வாழ்க்கை முறை: உண்மையான அகோரி துறவிகள் பொதுவாக தனிமையில் வாழ்கிறார்கள். பொது இடங்களில் மிகவும் அரிதாகவே இவர்கள் காணப்படுகிறார்கள். கும்பமேளா போன்ற மத நிகழ்வுகளின்போது மட்டுமே இவர்கள் அதிகமாகக் காணப்படுகிறார்கள். அகோரிகள் யாசகம் பெறுவதைப் பார்த்தால் அவர்கள் உண்மையான அகோரிகள் அல்ல.

அகோரிகள் தகன மைதானங்கள் அல்லது மனிதர்களின் அதிக நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வசிக்கிறார்கள். ஏனெனில், அத்தகைய இடங்கள் அவர்களின் ஆன்மிக நடைமுறைகளுக்கும், சடங்குகளுக்கும் ஏற்றதாகக் கருதப்படுகின்றன. அகோரிகள் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாபா கினாராமின் போதனைகளைப் பின்பற்றுகிறார்கள். மேலும், அவரது செயல்களை அவர்கள் தங்கள் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறார்கள். அகோரிகள் முதலில் வாரணாசியில் தோன்றினார்கள். பின்னர் நாடு முழுவதும் உள்ள கோயில்களில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவினார்கள்.

அகோரிகளை தோற்றுவித்தவர் யார்?

நவீன கால அகோரிகள் தங்கள் தோற்றத்தை, 150 ஆண்டுகள் வாழ்ந்து, 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலமானதாக நம்பப்படும் துறவியான பாபா கீனராமிடம் காண்கிறார்கள். பாபா கீனராம் சைவ மதத்தில் அகோரி பிரிவின் நிறுவனராகக் கருதப்படுகிறார். அவர்தான் விவேக்சாரம், ராமகீதம், ராம்ரசால் மற்றும் உன்முனிராம் போன்ற நூல்களில் அதன் கொள்கைகளையும் நடைமுறைகளையும் முதன்முதலில் தொகுத்தவர். சிவபெருமானின் அவதாரமாக மதிக்கப்படும் அவரது பிறப்பு பல அற்புதமான அறிகுறிகளுடன் சேர்ந்து, அவரது ஆன்மிக முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியது.

6 வகை நோய்களுக்கு 'குட்பை' சொல்லும் லெமன் டீ!

பாபா கீனராம் 1658ல் உத்தரபிரதேசத்தில் உள்ள ராம்கர் கிராமத்தில் ஒரு க்ஷத்திரிய குடும்பத்தில் பிறந்தார். அவர் சிவ வழிபாட்டிற்கு உகந்ததாகக் கருதப்படும் பத்ரபாத மாதத்தின் சதுர்தசி நாளில் பிறந்தார். அவர் பிறக்கும்போதே பற்களுடன் இருந்ததாகக் கருதப்படுகிறது. இது ஒரு அரிய நிகழ்வு மற்றும் ஆன்மிக சக்தியின் அடையாளம்.

அகோரிகளின் மர்ம வாழ்க்கை: அகோரிகளின் வாழ்க்கை மிகவும் மர்மமானது. அவர்களைப் பற்றிய புரிதல் மக்களுக்கு இப்போதும் குறைவாகவே உள்ளது. மேலும், அவர்களைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட பயம் உள்ளது. இருப்பினும், இந்த பயத்தை அவர்களைப் புரிந்துகொள்வதன் மூலம் மட்டுமே அகற்ற முடியும். அவர்களின் வாழ்க்கைத் தத்துவம் எளிமையானது. 'நீங்கள் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். மேலும், எங்கள் விடுதலைக்கான பாதையைப் பின்பற்ற எங்களை அனுமதிக்கவும்' என்பதுதான். அவர்களின் சடங்குகள், வாழ்க்கை முறை மற்றும் வழிபாட்டு முறை அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online