Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: ஏன் குறியீட்டு நிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: ஏன் குறியீட்டு நிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

Kalki Online 1 week ago

குறியீட்டு நிதி (Index Fund) என்றால் என்ன?

குறியீட்டு நிதி என்பது நிஃப்டி 50 அல்லது சென்செக்ஸ் போன்ற குறிப்பிட்ட பங்குச்சந்தை குறியீட்டின் செயல்திறனை பின்பற்றும் ஒருவகை பரஸ்பர நிதியாகும் (Mutual Fund).

இது சந்தைக் குறியீட்டில் உள்ள அதே நிறுவனப் பங்குகளில், அதே விகிதத்தில் முதலீடு செய்வதன் மூலம், சந்தைக்கேற்ற வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது.

குறியீட்டு நிதிகள் எவ்வாறு செயல்படுகின்றன?

குறியீட்டு நிதிகள் என்பவை நிஃப்ட் 50 அல்லது சென்செக்ஸ் போன்ற பங்குச் சந்தை குறியீடுகளை பிரதிபலிக்கும் வகையில் அதே பங்குகளில் முதலீடு செய்யும் ஒரு வகை செயலற்ற மியூச்சுவல் ஃபண்டாகும். இவை குறியீட்டில் உள்ள நிறுவனங்களின் பங்குகளின் விகிதாச்சார படியே முதலீடு செய்து, சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப நீண்ட கால லாபத்தை நோக்கமாகக் கொள்கின்றன.

குறியீட்டு நிதிகளில் எவ்வாறு முதலீடு செய்வது?

இந்தியாவில் குறியீட்டு நிதிகளில் (Index Funds) முதலீடு செய்ய, முதலில் பான் கார்டு(PAN) மற்றும் ஆதார் மூலம் KYC சரிபார்ப்பை முடிக்க வேண்டும். பிறகு ET Money அல்லது Groww போன்ற முதலீட்டு தளங்கள் அல்லது AMC (Asset Management Company) இணையதளம் வழியாக, Nifty 50 அல்லது Sensex போன்ற குறியீடுகளை தேர்ந்தெடுத்து, SIP அல்லது மொத்தத் தொகை(lumpsum) மூலம் முதலீடு செய்யலாம்.

முக்கிய அம்சங்கள்:

டீமேட் கணக்கு தேவையில்லை:

மியூச்சுவல் ஃபண்ட் ஆப் மூலம் நேரடியாக முதலீடு செய்தால் டிமேட் கணக்கு கட்டாயமில்லை.

நீண்ட காலம் முதலீடிற்கு, சந்தை ஏற்ற இறக்கங்களை சமாளிக்க SIP முறை சிறந்தது.

குறைந்த விகிதம் (பொதுவாக < 0.3%) உள்ள ஃபண்டுகள் அதிக லாபம் தரும்.

குறியீட்டு நிதிகளில் முதலீடு செய்வதன் நன்மைகள்:

குறைந்த செலவுகள்:

இந்த நிதிகள் 'செயலற்ற' பாணியில் நிர்வகிக்கப் படுவதால், நிதி மேலாளருக்கான கட்டணம் மற்றும் பிற நிர்வாகச் செலவுகள் மிகக் குறைவு.

பல்வகைப்படுத்தல் மூலம் குறைந்த ஆபத்து:

நிஃப்டி 50 போன்ற குறியீட்டில் முதலீடு செய்யும் பொழுது, உங்கள் பணம் அந்தந்த குறியீட்டில் உள்ள 50 முக்கிய நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் ஒரு நிறுவனத்தின் சரிவு ஒட்டுமொத்த முதலீட்டை பாதிக்காது.

5 லட்சத்தை ஒரே FD-யில் முதலீடு செய்வதற்கு முன் இதை படியுங்கள்.. காத்திருக்கும் மாபெரும் லாபம்!

சந்தை சார்ந்த வருமானம்:

நிஃப்டி அல்லது சென்செக்ஸ் நீண்ட கால அடிப்படையில் சிறப்பாக செயல்படுவதால், அதன் நகலை பின்பற்றும் குறியீட்டு நிதிகள் நிலையான சந்தை வளர்ச்சி வருமானத்தை வழங்குகின்றன.

வெளிப்படைத்தன்மை மற்றும் எளிமை:

குறியீட்டு நிதிகள் எந்தெந்தப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரியும். இதனால் புதிய முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் எளிமையானது.

வரி திறன்:

பங்குகளை அடிக்கடி வாங்கவோ விற்கவோ செய்யாததால் (Low turnover), இதில் மூலதன ஆதாய வரி (Capital Gains Tax) குறைவாகவே இருக்கும்.

குறியீட்டு நிதிகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இருப்பினும் நீண்ட கால அடிப்படையில் செல்வத்தை உருவாக்க இது ஒரு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.

எந்த குறியீட்டு நிதி சிறந்தது?

சிறந்த குறியீட்டு நிதி என்பது தனிப்பட்ட நிதி இலக்குகளையும், இடர் ஏற்கும் திறனையும் பொறுத்தது. இந்தியாவில் தொடக்க நிலையாளர்களுக்கான சிறந்த குறியீட்டு நிதி என்பது பரந்த அடிப்படையிலான குறியீட்டு நிதியாகும்‌.

குறிப்பிட்ட துறை சார்ந்த நிபுணத்துவம் உள்ளவர்கள், துறை சார்ந்த நிதிகளை பரிசீலிக்க வேண்டும்.

சர்வதேச அளவில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் சர்வதேச குறியீட்டு நிதிகளைக் கருத்தில் கொள்ளலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online