தீபாவளி போன்ற பண்டிகை சமயங்களில் நிறைய இனிப்புகள் வீட்டில் செய்வார்கள். அதைப் பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக அனைவருக்கும் தோன்றும்.
1. இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றும் சமயம் அவர்கள் அதற்கு மாற்றாக பழங்களை எடுத்துக்கொள்ளலாம். முக்கியமாக, Glycemic index குறைவாக உள்ள பழங்களை எடுத்துக்கொள்வதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. பெர்ரி, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது.
2. உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்தை சேர்த்துக்கொள்வது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை கட்டுக்குள் கொண்டுவரும். புரதம் மற்றும் நார்ச்சத்தை உணவில் எடுத்துக்கொள்வதால், முழு உணவு சாப்பிட்ட திருப்தியை பெறலாம். மேலும், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைக்கும்.
3. சில சமயங்களில் நீரிழிவு நோயாளிகள் தாகம் எடுப்பதைக்கூட பசியில் இருக்கிறோமோ? என்று தவறாக நினைத்துக் கொள்வதுண்டு. எனவே, நன்றாக தண்ணீர் குடித்து உடலை hydrated ஆக வைத்துக்கொள்வது சிறந்தது. இது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தைக் குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
4. சாப்பாடு சாப்பிடாமல் இருப்பது இரத்த சர்க்கரை அளவு குறைய காரணமாகும். இதனால் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். வழக்கமாக சாப்பிடக்கூடிய நேரத்தில், சாப்பிடக்கூடிய அளவில் உணவை எடுத்துக்கொண்டால் அதிகமான பசியைக் கட்டுப்படுத்தலாம்.
5. சியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால், இது வயிற்றில் சென்று ஜெல்லி போன்று உருவாகிவிடும். இதனால் நீங்கள் நன்றாக சாப்பிட்ட உணர்வைப் பெற முடியும். இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் வராது. மேலும், சியா விதையில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், நார்ச்சத்து உள்ளதால் உடலுக்கு மிகவும் இது நல்லதாகும்.
ஸ்வீட்டின் மேல் ஒட்டியிருக்கும் சில்வர் பேப்பரை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமா?6. டார்க் சாக்லேட்டில் Flavanols உள்ளது. இது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. Sugar free கம்மை மெல்வது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை குறைக்கிறது. இவற்றையெல்லாம் பின்பற்றி இந்த தீபாவளியை இனிப்பாகவும் ஆரோக்கியமாகவும் கொண்டாடுங்கள்.

