Dailyhunt
Personal Finance: இந்திய சாமானியர்களுக்கான அத்தியாவசிய நிதிக் குறிப்புகள்!

Personal Finance: இந்திய சாமானியர்களுக்கான அத்தியாவசிய நிதிக் குறிப்புகள்!

Kalki Online 1 year ago

நிதிகளை முறையாக கையாள்வது என்பது ஒரு முக்கியமான திறமையாகும். இது ஒவ்வொரு தனிநபரும் சரியான முடிவுகளை எடுக்கவும், தங்களின் பணம் சார்ந்த இலக்குகளை அடையவும் மற்றும் அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.

பொதுவாகவே பெரும்பாலான இந்தியர்களுக்கு நிதி சார்ந்த கல்வி அறிவு குறைவு. எனவே ஒவ்வொரு சாமானியனும் தனிப்பட்ட நிதி சார்ந்த அடிப்படை கருத்துகளை புரிந்துகொள்ள வேண்டும். இந்த பதிவானது ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் அறிய வேண்டிய நிதி சார்ந்த விஷயங்களை உள்ளடக்கியுள்ளது.

பட்ஜெட்: ஒருவர் தன் பணத்தை முறையாக கையாள்வதற்கு பட்ஜெட் உருவாக்க வேண்டியது அடிப்படையானது. வருமானம் மற்றும் செலவுகளை கண்காணிப்பதன் மூலம், ஒவ்வொரு தனிநபரும் தங்கள் நிதி நிலைமையைப் பற்றி தெளிவான கண்ணோட்டத்தைப் பெற முடியும். வரவு செலவு திட்டமானது, நாம் அதிகமாக செலவு செய்வதை கண்டறிவதற்கும், சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்வதற்கும், பணம் சார்ந்த இலக்குகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் உதவுகிறது.

அவசரகால நிதிகள்: திடீரென ஏற்படும் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க, அவசரகால நிதியை உருவாக்குவது மிக முக்கியமானது. எனவே ஒவ்வொரு இந்தியரும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை அவசரகால நிதிக்காக தவறாமல் ஒதுக்க வேண்டும். இது, பொதுவாக மூன்று முதல் ஆறு மாத செலவுகளுக்கு சமமான தொகையாக இருக்க வேண்டும். திடீர் வேலை இழப்பு, மருத்துவம் அல்லது வாகனங்களின் எதிர்பாராத பழுதுபார்ப்பு சூழ்நிலைகளின்போது இந்த நிதி, மன அமைதியை வழங்குகிறது.

கடன்: கடன் வாங்குவது தவறில்லை, ஆனால் புத்திசாலித்தனமாக கடன் வாங்க வேண்டும். அதிகமாக கடன் வாங்கி செலவு செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வீட்டுக் கடன் அல்லது கல்வி கடன் போன்ற நல்ல கடன்கள் நீண்ட கால பலன்களுக்கு வழிவகுக்கும். அதேசமயம் கிரெடிட் கார்டு கடன் போன்ற அதிக வட்டியுடைய மோசமான கடன், உங்களது நிதி முன்னேற்றத்தை தடுக்கலாம். வட்டி விகிதங்கள், கடனை எப்படி செலுத்தப் போகிறீர்கள் போன்ற அனைத்தையும் புரிந்துகொண்டு கடன் வாங்குவது, கடன் என்னும் சூழ்ச்சி வலையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க உதவும்.

Credit Score-ன் முக்கியத்துவம்: ஒருவரது நிதி சார்ந்த விஷயங்களில் கிரெடிட் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கின்றது. கடன்கள், கிரெடிட் கார்டுகள் அல்லது சாதகமான வட்டி விகிதங்களை பாதுகாக்கும் தன்மையை அது பெற்றுள்ளது. கடன் வாங்காமல் இருப்பதன் மூலமும், வாங்கிய கடனை சரியான நேரத்தில் அடைப்பதன் மூலமும், உங்களது கிரெடிட் ஸ்கோர் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் உங்களது பலதரப்பட்ட நிதி வாய்ப்புகளை மேம்படுத்துகிறது.

நீண்ட கால திட்டமிடல்: நீண்ட காலத்திற்கான திட்டமிடல் என்பது, கடைசி காலத்தில் நிம்மதியாக ஓய்வு பெறவும், உங்களது நிதி சார்ந்த இலக்குகளை அடையவும் அவசியமானது. ஒவ்வொரு தனிநபரும் தங்களது செல்வத்தை காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொள்ள, மியூச்சுவல் ஃபண்ட், ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் வருங்கால வைப்பு நிதிகள் போன்ற விஷயங்களில் முதலீடு செய்ய வேண்டும். மேலும், எதிர்பாராத நிகழ்வுகளில் இருந்து பாதுகாப்புடன் இருக்க காப்பீடுகள் பற்றி தெரிந்து கொள்வது நல்லது.

உங்களை சிறப்பான நபராக மாற்ற உதவும் 3 அடிப்படைக் கேள்விகள்!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சாமானியனும் மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். இது அவர்களது நிதி நிலைமையை கொஞ்சம் கொஞ்சமாக நல்ல நிலைக்கு கொண்டு செல்லும். அதேநேரம் நிதி சார்ந்த பாதுகாப்பை அளித்து, நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online