Dailyhunt
சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகள்: ஆபத்துகளைத் தவிர்க்க சில பயனுள்ள தீர்வுகள்!

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகள்: ஆபத்துகளைத் தவிர்க்க சில பயனுள்ள தீர்வுகள்!

Kalki Online 7 months ago

சாலைகளில் மாடுகள் (கன்று, காளை போன்றவை) சுதந்திரமாக நடப்பது இந்தியாவின் பல நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் காணப்படும் ஒரு பொதுவான நிலை.

ஆனால், இது பல்வேறு ஆபத்துகளுக்கும் சிரமங்களுக்கும் வழிவகுக்கிறது. பாரம்பரியமாக, மாடு நம் சமூகத்திற்கும், மத நம்பிக்கைகளுக்கும் மிகுந்த தொடர்புடைய ஒரு விலங்காகக் கருதப்படுகிறது. எனினும், அதே மாடு சாலையில் அலைந்து திரிவது, மக்கள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்தாகவும் அச்சுறுத்தலாகவும் மாறி வருகிறது.

சாலையின் நடுவில் திடீரென மாடுகள் தோன்றுவதால் ஏற்படும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது மக்கள் உயிரிழப்பு மட்டுமல்லாமல், பொருளாதார இழப்பையும், சுகாதார பிரச்னைகளையும் உருவாக்குகிறது. எனவே, மாடுகள் சாலையில் நடமாடுவதற்கான காரணங்களை ஆய்வு செய்து, அதனால் ஏற்படும் ஆபத்துகளை சுட்டிக்காட்டி, அதனைத் தவிர்க்கக்கூடிய நடைமுறைகளை செயல்படுத்துவது காலத்தின் கட்டாயமாகிறது.

முதலைக் கண்ணீரின் காரணம் என்ன தெரியுமா?

சாலைகளில் மாடுகள் நடப்பதால் ஏற்படும் ஆபத்துகள்:

1. போக்குவரத்து விபத்துகள்: திடீரென மாடுகள் சாலையில் நடக்க, ஓட அல்லது படுக்கக்கூடும். இதனால் வாகன ஓட்டிகள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம்.

2. வாகன சேதம்: மாடுகள் மீது மோதுவதைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் திடீர் பிரேக் அடிப்பது அல்லது வாகனத்தை சாய்த்து ஓட்டுவதன் காரணமாக வாகனங்கள் சேதமடையும் வாய்ப்பு அதிகம்.

3. பாதசாரிகளின் பாதுகாப்பு பிரச்னை: சாலையோரம் நடந்து செல்பவர்களை மாடுகள் மோத வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, காளைகள் சண்டையிடும்போது பொதுமக்கள் காயமடையலாம்.

4. போக்குவரத்து நெரிசல்: மாடுகள் சாலையின் நடுவில் நீண்ட நேரம் நிற்பதால், வாகனங்கள் நின்று போக்குவரத்து நெரிசல் உருவாகும்.

5. சுகாதாரப் பிரச்னைகள்: மாடுகள் சாலைகளில் கழிவுகளை விட்டுச் செல்வதால் சுத்தமின்மை, துர்நாற்றம், தொற்று நோய் அபாயம் போன்றவை அதிகரிக்கும்.

6. இரவு நேர அபாயம்: தெரு விளக்குகள் குறைவாக இருக்கும் சாலைகளில் மாடுகள் தெரியாமல் போகலாம். இதனால் இரவு நேர விபத்துகள் நேர வாய்ப்பு உண்டு.

பவளப் பாறைகளின் தோழர்கள்: கடலின் அழகைக் காக்கும் பச்சை நிற மீன்களின் ரகசியங்கள்!

இந்த ஆபத்துகளை தவிர்க்க எடுக்கக்கூடிய நடைமுறைகள்:

1. மாட்டு பராமரிப்புக்கு விதிமுறைகள்: அரசு மற்றும் உள்ளாட்சி மன்றம் மாடுகளை சாலையில் விடக் கூடாது என்று அதன் உரிமையாளர்களுக்கு சட்டப்படி கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

2. சாவடி மற்றும் தங்குமிடங்கள்: தெருவில் சுற்றும் மாடுகளை தனி கோசாலா (cow shelter) போன்ற இடங்களில் பாதுகாப்பாக வைத்து பராமரிக்க வேண்டும்.

3. விலங்கு அடையாளம் மற்றும் பதிவு: ஒவ்வொரு மாட்டுக்கும் அடையாளக் குறி (tag) பொருத்தி, உரிமையாளரை கண்டறிய வசதி செய்ய வேண்டும்.

4. வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும்: மாடுகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் வாகனத்தை மெதுவாக ஓட்டுதல், எச்சரிக்கை பலகைகள் அமைத்தல், இரவு நேரத்தில் ஹெட் லைட்டை சரியாகப் பயன்படுத்துதல்.

5. மக்கள் விழிப்புணர்வு: கிராமப்புறம், நகர்ப்புறம் என அனைத்து இடங்களிலும் மாடுகளை சாலையில் விடுவது எவ்வளவு அபாயகரமானது என்று உரிமையாளர்களுக்கு விளக்க வேண்டும்.

6. குப்பை நிர்வாகம்: தெருக்களில் உணவுக் கழிவுகள் கிடைக்காமல் இருந்தால், மாடுகள் சாலையில் அலைந்து திரிய வாய்ப்பு குறையும். எனவே, உணவுக் கழிவுகள் இல்லாமல் தெருக்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

சாலைகளில் மாடுகள் நடப்பது நம் போக்குவரத்து பாதுகாப்பிற்கும், சுகாதாரத்திற்கும் பெரிய சவாலாகும். மாடுகளின் உரிமையாளர்கள் பொறுப்புணர்வோடு மாடுகளை பராமரிக்க வேண்டும்; அதேசமயம் அரசு, உள்ளாட்சி மன்றம், மக்கள் அனைவரும் இணைந்து மாடுகள் சாலையில் இல்லாமல், பாதுகாப்பான இடங்களில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விபத்துகளும் சிரமங்களும் தவிர்க்கப்படும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online