Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சமூக சேவையில் சத்ய சாய்பாபா ஆற்றிய ஆச்சரியமூட்டும் அரிய பணிகள்!

சமூக சேவையில் சத்ய சாய்பாபா ஆற்றிய ஆச்சரியமூட்டும் அரிய பணிகள்!

Kalki Online 7 months ago

த்ய சாய்பாபா மேற்கொண்ட சமூக சேவைப் பணிகள், அவர் நிறுவிய அறக்கட்டளை மூலம் உலகம் முழுவதும் பரவியுள்ளன.

அவரது தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சில முக்கியப் பணிகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

சத்ய சாய்பாபா சமூக சேவையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளார். அவர் நிறுவிய நிறுவனங்கள் மூலம் உலகெங்கிலும் இலவச மருத்துவமனைகள், குடிநீர் திட்டங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் கலாசார மையங்கள் மூலம் சேவை செய்துள்ளார். அவரது போதனைகள் 'மனித சேவை கடவுளுக்கு சேவை' என்பதை மையமாகக் கொண்டது. அத்துடன் சுய மற்றும் சமூக மாற்றத்தையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

காஞ்சி கச்சபேஸ்வரர் கோயிலில் மட்டுமே நடைபெறும் விநோத கார்த்திகை கடைஞாயிறு வழிபாடு!

சத்ய சாய் ஆற்றிய சமூக சேவைப் பணிகள்:

மருத்துவம்: இலவச மருத்துவமனைகள் மூலம் ஏழை நோயாளிகளுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் நிலைகளில் மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. இங்கு ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இவற்றில் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் மெடிக்கல் சயின்சஸ் (Sri Sathya Sai Institute of Higher Medical Sciences) மிக முக்கியமானது.

குடிநீர்: ஆந்திரா மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வசதி திட்டங்களை உருவாக்கியுள்ளார். பாபா தலைமையிலான அறக்கட்டளை, பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தியது. வறட்சி பாதித்த பகுதிகளுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. அத்துடன் அவர் கிராமப்புற மேம்பாடு, வீட்டு வசதித் திட்டங்கள் மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளிலும் கவனம் செலுத்தினார்.

வாழ்க்கையை மாற்றும் உலக தத்துவ மேதைகளின் 7 பொன்மொழிகளின் ரகசியம்!

கல்வி: பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்களை நிறுவி, அனைவருக்கும் கல்வியை வழங்குகிறார். பாபா கல்வி நிறுவனங்களை நிறுவி, மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்கினார். இந்த நிறுவனங்களில் சத்ய சாய் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் (Sri Sathya Sai Deemed University) போன்ற புகழ் பெற்ற கல்விக்கூடங்களும் அடங்கும்.

கலாசாரம்: கலைக்கூடங்கள் மற்றும் சமூக சேவை மையங்கள் மூலம் கலாசார மற்றும் பண்பாட்டு மேம்பாட்டில் உதவுகிறார். நாட்டின் இளைஞர்களுக்கு இந்திய கலாசாரம் மற்றும் ஆன்மிக மரபுகளை பரப்புவதும், பஜனைகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் மூலம் பக்தி மற்றும் ஆன்மிக முன்னேற்றத்தை ஊக்குவிப்பதும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன. இந்திய கலாசாரத்தின் வளமான விழுமியங்கள் மற்றும் பாரம்பரியத்தை உலகெங்கிலும் உள்ள இளைஞர்களிடையே பரப்புவதற்காக, இந்திய கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தில் படிப்புகள் மற்றும் திட்டங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

சேவைக்கான அவரது பார்வை: அவர் 'இந்த உலகில் எங்கும் துன்பத்தில் இருக்கும் எவருக்கும் அனுதாபத்துடனும் திறமையுடனும் செய்யப்படும் ஒவ்வொரு சேவையும் சத்ய சாயி சேவையாகும்' என்று வரையறுத்தார்.சேவை செய்பவர்கள் புத்திசாலிகளாகவும், நேர்மையாகவும், பயிற்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளைக்கு ஐக்கிய நாடுகளின் சிறப்பு ஆலோசனை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 114 நாடுகளில் சுமார் 1,200 சத்ய சாய் மையங்கள் உள்ளன.அவரது சேவைப் பணிகள் சுய மற்றும் சமூகத்தின் மாற்றத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online