Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சுவை மிகுந்த காரைக்குடி சாம்பார்  மற்றும்  பீர்க்கங்காய் மோர் குழம்பு!

சுவை மிகுந்த காரைக்குடி சாம்பார் மற்றும் பீர்க்கங்காய் மோர் குழம்பு!

Kalki Online 1 year ago

காரைக்குடி சாம்பார் என்பது காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு மிகவும் பிரபலமான சுவையான சாம்பார் வகையாகும்.

காரைக்குடி சாம்பார்

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - ½ கப்

தக்காளி - 2 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2

புளி கரைசல் - 2 டேபிள்ஸ்பூன்

குங்குமப்பூ - ¼ டேபிள்ஸ்பூன்

சாம்பார் மசாலா - 2 டேபிள்ஸ்பூன்

வெங்காயம் - 1 (நறுக்கியது)

கறிவேப்பிலை - 2 கீற்று

தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

கடுகு - ½ டேபிள்ஸ்பூன்

சீரகம் - ½ டேபிள்ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - ½ டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மிளகாய்ப்பொடி - ½ டேபிள்ஸ்பூன்

துவரம்பருப்பு - ½ கப்

செய்முறை: முதலில் துவரம் பருப்பை குக்கரில் 1 கப் தண்ணீருடன், அது நன்றாக வெந்து போகும் வரை வேகவைக்கவும். பின்னர் ஒரு கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி மென்மையாக ஆனதும், அதில் சாம்பார் மசாலா, மிளகாய் பொடி, குங்குமப்பூ சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும்.

கார்த்திகைக்கு மிளகு அடையும் வெல்ல அடையும் செய்வோமா?

இப்போது புளி, தேங்காய் துருவல் மற்றும் வேகவைத்து எடுத்த துவரம் பருப்பு சேர்க்கவும். பின்னர் நன்கு கலக்கி, சிறிது நேரம் கொதிக்க விடவும். பின்னர் உப்பு மற்றும் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, சாம்பாரை சிறிது வற்ற வைக்கவும். இறுதியில், எண்ணெயில் வதக்கிய வெண்டைக்காய், கத்தரிக்காய் அல்லது முருங்கைக்காய் சேர்க்கவும்.

சாம்பார் இறக்கும்போது கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.

காரைக்குடி சாம்பார் சாதம், இடியாப்பம், தோசை மற்றும் இட்லி போன்றவற்றுடன் பரிமாறவும்.

பீர்க்கங்காய் மோர் குழம்பு

பீர்க்கங்காய் மோர் குழம்பு என்பது சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கக்கூடிய பாரம்பரிய உணவாகும்.

தேவையான பொருட்கள்:

பீர்க்கங்காய் - 1 (தோல் நீக்கி வட்டமாக நறுக்கியது)

மோர் - 2 கப்

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

மசாலா அரைப்பதற்கு:

துருவிய தேங்காய் - ¼ கப்

பச்சை மிளகாய் - 2

சீரகம் - ½ டீஸ்பூன்

நன்கு ஊற வைத்த துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

தாளிக்க:

எண்ணெய் - 1 டீஸ்பூன்

கடுகு - ½ டீஸ்பூன்

வெந்தயம் - ¼ டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

காய்ந்த மிளகாய் - 1

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பீர்க்கங்காயை 1 கப் தண்ணீரில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மென்மையாக சமைக்கவும். தேங்காய், பச்சை மிளகாய், ஜீரகம், துவரம் பருப்பு, இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

வெந்தயக்கீரை பிரியாணியும், வேர்க்கடலை கத்திரிக்காய் கூட்டும்!

சமைந்த பீர்க்கங்காயில் அரைத்த மசாலா விழுதை சேர்க்கவும். 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும். பின்னர் மோர் சேர்த்து மிதமான சூட்டில் 1-2 நிமிடங்கள் கிளறி எடுத்துக்கொள்ளவும். (மோர் சேர்த்த பின் அதிகமாக கொதிக்க விடக்கூடாது).

ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்க்கவும். சூடான சாதத்துடன் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online