Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தீபாவளிக்கு துணி எடுக்குறீங்களா? முருகனோட இந்த சீக்ரெட்ட மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

தீபாவளிக்கு துணி எடுக்குறீங்களா? முருகனோட இந்த சீக்ரெட்ட மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

Kalki Online 8 months ago

ம்ம எல்லாருக்கும் தீபாவளினாலே புது டிரஸ், பட்டாசு, பலகாரம்னு ஒரே குஷிதான். வருஷத்துக்கு ஒருமுறை வர்ற இந்த பண்டிகையை சந்தோஷமா கொண்டாடணும்னுதான் நாம எல்லாரும் நினைப்போம்.

அதுலயும் புதுத் துணி வாங்குறதுங்கிறது ஒரு தனி உற்சாகம்.

ஆனா, அந்த சந்தோஷம் வருஷம் முழுக்க நிலைச்சு நிக்க, கடன் இல்லாம, பணக்கஷ்டம் இல்லாம மத்த பண்டிகைகளையும் கொண்டாட ஒரு சின்ன பரிகாரம் இருக்கு. நம்ம முருகப்பெருமானுக்கு புது ஆடை வாங்குறதுக்கு முன்னாடி ஒரு எளிய விஷயத்தைச் செஞ்சா, வறுமை நீங்கி, வாழ்க்கை வளமாகும்னு ஒரு நம்பிக்கை இருக்கு.

முருகப்பெருமானுக்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரம்:

இந்த பரிகாரத்தைச் செய்யுறது ரொம்பவே சுலபம். புதுசா துணி வாங்கப் போறதுக்கு முன்னாடி, வீட்டுல இத முதல்ல செஞ்சு முடிச்சிடுங்க.

  • முதல்ல, வெள்ளைத் துணி ஒண்ணை எடுத்துக்கோங்க. அதை ஒரு சதுர வடிவத்துல வெட்டிக்கோங்க.

  • பிறகு, அந்தத் துணியை மஞ்சள் கலந்த தண்ணியில நனைச்சு, காய வச்சு எடுத்துக்கணும்.

  • காய்ந்த அந்த மஞ்சள் துணியில, கொஞ்சம் மஞ்சள் தடவிய பச்சரிசி, 2 கிராம்பு, 1 ஏலக்காய், 1 ரூபாய் நாணயம் ஒண்ணையும் வைங்க.

  • இப்போ, இதை ஒரு சின்ன முடிச்சு மாதிரி கட்டி, உங்க வீட்டுப் பூஜை அறையில இருக்கிற முருகன் படத்துக்கு முன்னாடி வச்சு மனதார பூஜை செய்யுங்க.

இந்த பூஜையை முடிச்ச பிறகு, நீங்க கடைக்குப் போய் உங்களுக்குப் பிடிச்ச புது ஆடைகளை வாங்கலாம்.

புது ஆடை வாங்கிய பிறகு என்ன செய்ய வேண்டும்?

நீங்க ஆசையா வாங்கிட்டு வந்த புது ஆடைகளை வீட்டுக்குக் கொண்டு வந்ததும், நாம ஏற்கனவே பூஜைல வச்ச அந்த முடிச்சை அவிழ்த்து, அதுல இருந்த ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் எடுங்க. அந்த நாணயத்தை புதுத் துணிகள் மேல வச்சு, மறுபடியும் ஒரு முறை முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்யுங்க.

தீபாவளி குறித்த இந்த அரிய தகவல்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

இப்படிச் செய்யுறதால, வருஷம் முழுக்க உங்களுக்கு பணக்கஷ்டம் இல்லாம, நல்ல துணிமணிகளை வாங்குற யோகம் கிடைக்கும்னு சொல்லப்படுது. பூஜை செஞ்சு முடிச்ச பிறகு, அந்த நாணயத்தையும் மத்த பொருட்களையும் திரும்பவும் அதே மஞ்சள் துணியில கட்டி, உங்க பூஜை அறையிலயே வச்சுடுங்க.

வாழ்க்கையில வர்ற கஷ்டங்களுக்கு ஆன்மிக ரீதியா இப்படிப்பட்ட சின்னச் சின்ன பரிகாரங்கள் ஒரு பெரிய மன தைரியத்தைக் கொடுக்கும். இது வெறும் புது ஆடை வாங்குறதுக்கு மட்டுமில்ல, வீட்டுக்கு எந்த ஒரு புதுப் பொருளை வாங்கினாலும், அதுக்கு முன்னாடி இந்த மாதிரி முருகப்பெருமானை நினைச்சுக்கிட்டு செய்யும்போது, கடன் தொல்லை இல்லாம, செல்வச் செழிப்போட இருக்கலாம் என்பது ஒரு ஆழமான நம்பிக்கை.

எட்டு கரங்களுடன் உலகளக்கும் பெருமாள்: சிறப்பு வாய்ந்த சிங்காநல்லூர் கோவில்!

அதனால், இந்த தீபாவளிக்கு புது துணி எடுக்கும்போது, இந்த சின்ன பரிகாரத்தையும் செஞ்சு பாருங்க. முருகப்பெருமானின் அருளால், உங்க வாழ்க்கையில வறுமை நீங்கி, செல்வம் பெருகட்டும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online