Dailyhunt
உலகையே மாற்றும் ChatGPT ஓனர் தன் சொந்த குழந்தைக்கு செய்ததை பாருங்கள்.. நீங்களே ஷாக் ஆவீங்க!

உலகையே மாற்றும் ChatGPT ஓனர் தன் சொந்த குழந்தைக்கு செய்ததை பாருங்கள்.. நீங்களே ஷாக் ஆவீங்க!

Kalki Online 1 week ago

ன்றைய காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் எல்லாமே கையில் மொபைல் போன் அல்லது டேப்லெட் இல்லாமல் சாப்பாடு கூட சாப்பிட மறுக்கிறார்கள்.

அந்த அளவுக்கு டிஜிட்டல் திரைகளுக்கு குழந்தைகள் அடிமையாகி விட்டார்கள். இந்த சூழ்நிலையில், ஒட்டுமொத்த உலகத்தையும் தனது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஆட்டிப்படைத்து வரும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன், தனது சொந்த குழந்தையை எப்படி வளர்க்கிறார் என்ற தகவல் பலருக்கும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்னாலஜியின் உச்சத்தில் இருக்கும் ஒரு நபர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் அதை எப்படி கையாள்கிறார் என்பதை இப்போது பார்ப்போம்.

மண்ணில் விளையாடும் குழந்தை!

கடந்த பிப்ரவரி 2025 ஆம் ஆண்டு வாடகைத்தாய் மூலமாக ஒரு அழகான ஆண் குழந்தைக்கு சாம் ஆல்ட்மேன் தந்தையானார். அவர் எடுத்திருக்கும் ஒரு முக்கியமான முடிவு என்னவென்றால், தனது மகன் எக்காரணத்தைக் கொண்டும் ஒரு ஐபேட் கிட் (iPad Kid) ஆக மாறிவிடக் கூடாது என்பதுதான்.

சின்னஞ்சிறு வயதிலேயே குழந்தைகள் மொபைல் மற்றும் ஐபேட் திரைகளுக்குள் மூழ்கிப் போவது அவருக்குப் பெரும் கவலையைக் கொடுத்துள்ளது. அதனால், தனது குழந்தை வீட்டை விட்டு வெளியே சென்று மண்ணில் புரண்டு விளையாடி இயற்கையோடு ஒன்றிணைய வேண்டும் என்பதில் அவர் மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக இருக்கிறார்.

அட்வைஸ்க்கு ஏஐ, குழந்தைக்கு இயற்கை!

இதில் ஒரு பெரிய வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இன்று உலகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களின் அசைன்மென்ட்களை முடிக்க ChatGPT-யை தான் முழுமையாக நம்பியுள்ளனர். ஆனால், அதை உருவாக்கியவரே தனது குழந்தைக்கு அதை இப்போதைக்கு அறிமுகம் செய்யப்போவதில்லை என தள்ளி வைத்துள்ளார். தொழில்நுட்பத்தை பயன்படுத்த தனது மகன் எந்த அவசரமும் காட்ட வேண்டாம் என அவர் நினைக்கிறார்.

அதே சமயம், ஒரு குழந்தையை எப்படி சிறப்பாக வளர்க்கலாம் என்ற ஐடியாக்களை கேட்பதற்கு மட்டும் அவர் சாட்ஜிபிடியின் உதவியைத்தான் நாடி வருகிறாராம். அதாவது தனக்கு அறிவுரை சொல்ல ஏஐ தொழில்நுட்பம், ஆனால் தனது பையனுக்கு நிஜமான இயற்கை விளையாட்டு என்பதுதான் அவரது தற்போதைய லைஃப்ஸ்டைல்.

சிலிக்கான் வேலியின் சீக்ரெட்!

இந்த விஷயத்தில் சாம் ஆல்ட்மேன் மட்டும் விதிவிலக்கு கிடையாது. அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள பல டெக் ஜாம்பவான்களின் வீடுகளிலும் இதே நிலைமைதான். ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் தனது குழந்தைகளுக்கு ஐபேட் பயன்படுத்த அனுமதி கொடுத்ததே இல்லையாம். அதேபோல பில் கேட்ஸ் தனது குழந்தைகளுக்கு பதினான்கு வயது ஆகும் வரை சொந்தமாக மொபைல் போன் வாங்கிக் கொடுக்கவில்லை.

கைமீறிப் போகிறதா AI? "Shut Down" ஆர்டரை மதிக்காத கம்ப்யூட்டர்கள்.. என்ன நடக்கிறது?

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஜாக் கிளார்க் கூட யூடியூப் அல்காரிதம்கள் தனது குழந்தையைத் தவறான வழியில் கொண்டு சென்றுவிடுமோ எனப் பயந்து அதைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறார். உலகிற்கே டிஜிட்டல் சாதனங்களை விற்கும் இவர்கள், தங்களின் சொந்த வீட்டில் அதற்குக் கடிவாளம் போடுவது நாம் கவனிக்க வேண்டிய ஒரு மிகப்பெரிய பாடமாகும்.

எதிர்காலம்!

தற்போதைக்கு தனது குழந்தையை டெக்னாலஜியில் இருந்து தள்ளி வைத்தாலும், எதிர்கால கல்வி முறையில் செயற்கை நுண்ணறிவின் தேவை முக்கியம் என்பதை ஆல்ட்மேன் மறுக்கவில்லை. இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக பாடம் எடுக்க ஏஐ ஆசிரியர்கள் வருவார்கள் என அவர் அடித்துச் சொல்கிறார்.

இது மாணவர்களின் கற்கும் திறனை பல மடங்கு அதிகமாக்கினாலும், அதில் சில பிழைகள் நடப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதை அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள சில நவீன பள்ளிகளில் இந்த ஏஐ கல்வி முறை நடைமுறைக்கு வந்துவிட்டது.

இயந்திரங்களின் எழுச்சி: ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம் நம் வாழ்வை மாற்றுவது எப்படி?

தொழில்நுட்பம் என்பது ஒரு சிறந்த வேலைக்காரன், ஆனால் அது ஒரு மோசமான எஜமானன். இந்த உண்மையை சாம் ஆல்ட்மேன் போன்ற டெக் தலைவர்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார்கள். நாம் எந்த அளவுக்கு டிஜிட்டல் உலகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவுக்கு நிஜ மனிதர்களோடு பழகுவதற்கும் வெளி உலகைக் கண்டு ரசிப்பதற்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும்.

இந்த ஒரு சரியான சமநிலை இருந்தால்தான் நமது வருங்காலத் தலைமுறையின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதை இவர்களின் வாழ்க்கை முறை நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online