Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உங்கள் சமையல் திறனை அடுத்த நிலைக்கு உயர்த்தும் எளிய வழிகள்!

உங்கள் சமையல் திறனை அடுத்த நிலைக்கு உயர்த்தும் எளிய வழிகள்!

Kalki Online 10 months ago

மையல் என்பது வெறும் உணவு தயாரிப்பது மட்டுமல்ல; ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு, சுவையான உணவை உருவாக்கும் ஒரு அனுபவம்.

சில சமயங்களில், ஒரு சிறிய தந்திரம் அல்லது நுட்பம், உணவின் தரத்தையும் சுவையையும் சிறந்த முறையில் மேம்படுத்தும். இந்தச் சிறிய ரகசியங்கள், சமையலறையில் நேரத்தைச் சேமிப்பது மட்டுமன்றி, உங்கள் திறமையை மெருகேற்றவும் உதவும்.

வீட்டுச் சமையலுக்கான குறிப்புகள்:

  • பூரி மாவு பிசையும்போது, சாதாரண நீருக்குப் பதிலாக, சிறிதளவு வெதுவெதுப்பான நீரை நெய்யுடன் சேர்த்துப் பயன்படுத்தினால், பூரிகள் மிருதுவாகவும், உப்பலாகவும் வரும். இது, பூரிகள் நீண்ட நேரம் மென்மையாக இருக்கவும் உதவும்.

  • இட்லி மற்றும் தோசைக்கு மாவு அரைக்கும் போது, நீங்கள் பயன்படுத்தும் உளுந்தைச் சாதாரண நீருக்குப் பதிலாக, மிகவும் குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் தண்ணீரைப் பயன்படுத்தி அரைத்தால், மாவு நன்கு நுரைத்து, அதன் அளவு அதிகரிக்கும். இதனால், இட்லி மற்றும் தோசைகள் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

  • தோசைக்கல்லில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பைப் போக்க, அதைச் சூடாக இருக்கும்போதே சிறிதளவு மோரை விட்டுத் தேய்த்தால், பிசுபிசுப்பு முழுமையாக நீங்கி, கல் சுத்தமாகிவிடும்.

  • வாங்கும் காய்கறிகளைப் புதியதாக வைத்திருக்க, அவற்றை ஒரு கூடையில் வைத்து, அதன் மேல் ஒரு ஈரமான துணியால் மூடி வைத்தால் போதும். இது காய்கறிகளைச் சில நாட்களுக்குப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

  • காய்கறி பிரட்டலில் உப்பு அல்லது காரம் அதிகமாகிவிட்டால் கவலைப்பட வேண்டாம். மீண்டும் அதைச் சூடாக்கி, சிறிதளவு பச்சரிசி மாவைத் தூவி, ஒரு தேக்கரண்டி நெய்யைச் சேர்த்துக் கிளறினால், சுவை சமன்பட்டு, மிகவும் அருமையாக மாறும்.

  • குக்கர் ரப்பர் வளையம் தளர்ந்துவிட்டால், அதை குளிர்சாதனப் பெட்டியில் இரண்டு நாட்கள் வைத்துப் பயன்படுத்தினால், அது மீண்டும் இறுக்கமாகிவிடும்.

இனிப்பு வகைகள் செய்யும் முறை:

  • குலோப் ஜாமூன் மாவைச் சாதாரண தண்ணீருக்குப் பதிலாக, பால் சேர்த்துப் பிசைந்தால், உருண்டைகள் உடைந்து போகாமல், மென்மையாக இருக்கும்.

  • பூந்தி தயாரிக்க, கடலை மாவுடன் சிறிதளவு அரிசி மாவையும் கலந்து பயன்படுத்தினால், பூந்திகள் தனித்தனியாகவும், முத்து முத்தாகவும் வரும்.

  • அல்வா செய்யும் போது, அதன் பதம் தளர்ந்துவிட்டால், சிறிதளவு சோளமாவைக் கரைத்துச் சேர்த்தால், அது கெட்டியாகி, சரியான பதத்திற்கு வரும்.

தயிர் பானைக்கும் மோட்சம் கொடுத்த கண்ணனின் லீலை!
  • அதிரச மாவுடன் சிறிதளவு புளிக்காத தயிர் சேர்த்துப் பிசைந்து செய்தால், அதிரசங்கள் மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

  • பால் பவுடர், தேங்காய்த் துருவல், சர்க்கரைத்தூள், முந்திரிப் பொடி ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து, பிசைந்து நெய் தடவிய தட்டில் பரப்பி, சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்தால் போதும், சுவையான பர்ஃபி தயாராகிவிடும்.

  • ஜாங்கிரி உடையாமல் இருக்க, உளுந்து விழுதுடன் ஒரு தேக்கரண்டி அரிசி மாவைக் கலந்து பயன்படுத்தினால் போதும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online