Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வீட்டுச் சமையலறை கழிவுகளிலிருந்து 7 அற்புதமான தோட்டப் பராமரிப்பு தந்திரங்கள்!

வீட்டுச் சமையலறை கழிவுகளிலிருந்து 7 அற்புதமான தோட்டப் பராமரிப்பு தந்திரங்கள்!

Kalki Online 1 year ago

தோட்டம் அமைப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருந்தாலும், செடிகளுக்கு உரம் வாங்குவது, பூச்சி விரட்டிகள் பயன்படுத்துவது எனச் சில செலவுகளும் சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இதற்கெல்லாம் இனி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் சமையலறையிலிருந்து தினமும் வெளியேறும் சில 'கழிவுகள்', உண்மையில் உங்கள் தோட்டத்திற்குப் பொக்கிஷமாக மாறக்கூடும். நாம் வீணாகத் தூக்கி எறியும் பொருட்களிலேயே உங்கள் செடிகளை ஆரோக்கியமாக வளர்க்கவும், பூச்சிகளை விரட்டவும் பல அற்புதமான தந்திரங்கள் ஒளிந்துள்ளன. அவை என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

1. முட்டை ஓடுகள்: முட்டை ஓடுகள் கால்சியம் சத்து நிறைந்தவை. இவை செடிகளின் வளர்ச்சிக்கும், வேர்களின் உறுதிக்கும் அவசியம். முட்டை ஓடுகளை நன்கு கழுவி, காயவைத்து, பொடித்து, மண்ணில் கலக்கவும். தக்காளி, மிளகாய் போன்ற செடிகளுக்கு இது மிகவும் நல்லது. நத்தைகள் மற்றும் ஸ்லக்குகள் போன்ற பூச்சிகள் செடிகளை அண்டாமல் இருக்கவும் இது உதவும்.

2. வாழைப்பழம் தோல்: வாழைப்பழத் தோல்கள் பொட்டாசியம் சத்து நிறைந்தவை. இது பூக்கள் பூப்பதற்கும், பழங்கள் காய்ப்பதற்கும் அவசியம். வாழைப்பழத் தோலைச் சிறிய துண்டுகளாக வெட்டி, செடிகளின் வேர் பகுதிக்கு அருகில் மண்ணில் புதைக்கலாம் அல்லது தண்ணீரில் ஊறவைத்து அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தலாம். ரோஜா செடிகளுக்கு இது மிகச் சிறந்த உரம்.

3. காபி துகள்கள்: காபி அருந்திய பிறகு மீதமாகும் காபி துகள்களில் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை மண்ணின் அமிலத்தன்மையைச் சிறிது அதிகரித்து, மண் வளத்தை மேம்படுத்தும். ரோஜா, ஹைட்ரேஞ்சா போன்ற சில செடிகளுக்கு இது மிகவும் நல்லது. இதை நேரடியாக மண்ணில் தூவலாம் அல்லது தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றலாம். பூச்சிகளை விரட்டவும் இது உதவும்.

4. வெங்காயம் மற்றும் பூண்டு தோல்: வெங்காயம் மற்றும் பூண்டு தோல்களில் உள்ள கந்தகச் சத்து பூச்சிகளுக்குப் பிடிக்காதது. இந்தத் தோல்களை ஒரு பாட்டில் தண்ணீரில் போட்டு ஒரு நாள் ஊறவைத்து, பின்னர் அந்தத் தண்ணீரை வடிகட்டி பூச்சித் தொல்லை உள்ள செடிகள் மீது தெளிக்கலாம். இது ஒரு இயற்கை பூச்சி விரட்டியாகச் செயல்படும்.

மரப்பலகைகளில் காய்கறி வெட்டுகிறீர்களா? அச்சச்சோ… உடனே தூக்கிப் போடுங்க!

5. காய்கறி மற்றும் பழக் கழிவுகள்: சமையலுக்குப் பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்களின் தோல்கள், மீதங்கள் ஆகியவற்றை வீணாக்காமல், மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்தலாம். ஒரு கம்போஸ்ட் தொட்டி அல்லது குழி அமைத்து அதில் இந்த கழிவுகளைப் போட்டு வைப்பதன் மூலம், செடிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உரத்தைப் பெறலாம். இது மண் வளத்தை மேம்படுத்தும் சிறந்த வழியாகும்.

6. அரிசி கழுவிய நீர்: அரிசி கழுவிய நீரைச் சாதாரணமாகக் கொட்டிவிடுவோம். ஆனால், இந்த நீரில் மாவுச்சத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இந்த நீரைச் செடிகளுக்கு ஊற்றுவது அவற்றின் வளர்ச்சிக்கு உதவும். இதில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் வளர வாய்ப்புள்ளது.

அழகை மெருகூட்ட எலுமிச்சை புல்; உடல் பொலிவு பெற 3 இயற்கை ஸ்க்ரப்ஸ்

7. எலுமிச்சை, ஆரஞ்சு தோல்: எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களின் தோல்களில் உள்ள எண்ணெய் பூச்சிகளுக்குப் பிடிக்காதது. இந்தத் தோல்களைச் சிறிய துண்டுகளாக வெட்டி, செடிகளின் அடியில் மண்ணில் புதைக்கலாம். இது சில பூச்சிகளை விரட்டுவதுடன், மண்ணுக்கு ஒரு லேசான நறுமணத்தையும் சேர்க்கும்.

உங்கள் சமையலறைக் கழிவுகளை வீணாக்காமல், இந்த எளிய தந்திரங்களைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் தோட்டத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வளர்க்கலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online