Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அறிவாலயம் டூ பனையூர்: தவெக பக்கம் தாவ தயாரும் மக்கள் நலக்கூட்டணி

அறிவாலயம் டூ பனையூர்: தவெக பக்கம் தாவ தயாரும் மக்கள் நலக்கூட்டணி

டந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தற்போது 108 இடங்களை பெற்றுள்ளது. தவெக பெரும்பான்மையை நிரூபிக்க 11 இடங்கள் தேவைப்படுகிறது.

காங்கிரசு 5, இந்திய கம்யூனிஸ்ட், மா.கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 என6 இடம் உள்ளது. இந்த 4 கட்சிகளை சேர்த்து 11 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இந்த 4 கட்சிகளும் ஆதரவு அளித்தால் தவெக 119 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைக்கும். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கூட்டணி ஆட்சிக்கு வழிகை செய்த தமிழக மக்களுக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார். "ஆதரவு கோரி விஜய் அழைப்பு விடுத்தால் ஆலோசனை செய்து முடிவெடுப்போம்" என இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சிகள் தெரிவித்துள்ளன. விஜய்க்கு ஆதரவளிப்பது தொடர்பாக ராகுல் காந்தி முடிவு செய்வார் என, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எஸ்டிபிஐ முபாரக் ஆகியோர், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் விஜய் ஆட்சி அமைக்காவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சி அமைய வாய்ப்புள்ளதையும், அது நேரடியாகவே தமிழ்நாட்டில் பாஜக ஆள்வதற்கு வழிவகுக்கும்.

ஒருவேளை தேர்தல் நடந்தால் விஜய்க்கு அனுதாபத்தால் கூடுதல் தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.. இதனை தவிர்க்க விருப்பமிருந்தால் தாராளமாக விஜய் ஆட்சி அமைக்க ஆதரவளியுங்கள் என ஸ்டாலின் கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனையும் வழங்கியதாக தெரிகிறது. இதனால் காங்கிரசு, விசிக, இ.கம்யூ, மா.கம்யூ ஆகிய கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளிக்கும் என தெரிகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: kumutham