Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட தங்க நீர்மூழ்கிக் கப்பல்

50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட தங்க நீர்மூழ்கிக் கப்பல்

Lankasri News 2 weeks ago

ரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் தங்கம் ஏற்றிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல், 50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1944-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பானின் I-52 என்ற நீர்மூழ்கிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

இந்த கப்பல், ஜேர்மனிக்காக 146 தங்கக் கட்டிகள் (சுமார் 2 டன்), மருத்துவப் பொருட்கள், ரப்பர், டின், டங்ஸ்டன் போன்ற முக்கிய மூலப்பொருட்களை ஏற்றிச் சென்றது.

அமெரிக்க மற்றும் பிரித்தானிய குறியீடு உடைக்கும் குழுக்கள் (codebreakers), ஜப்பான்-ஜேர்மனி இடையேயான ரகசிய தகவல்களைப் பிடித்ததால், I-52 கப்பல் அமெரிக்க கடற்படையால் தாக்கப்பட்டு மூழ்கியது.

109 பேருடன் கப்பல் அட்லாண்டிக் கடலின் ஆழத்தில் மறைந்தது. பல தசாப்தங்களாக அதன் இருப்பிடம் தெரியாமல் இருந்தது. 1990-களில் ஆராய்ச்சியாளர் பால் டிட்வெல், பழைய பதிவுகளை ஆய்வு செய்து, 1995-இல் சோனார் மற்றும் ஆழ்கடல் தொழில்நுட்பத்தின் உதவியால் கப்பலை கண்டுபிடித்தார்.


துபாய் Duty Free லொட்டரியில் 2 இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்

17,000 அடி ஆழத்தில் கப்பல் நேராக நின்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கப்பலின் உடல் பெரும்பாலும் சேதமின்றி இருந்ததால், தங்கம் இன்னும் உள்ளே இருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஆனால், இது சட்ட மற்றும் நெறிமுறை சிக்கல்களால் மீட்கப்படவில்லை. இந்த கண்டுபிடிப்பு, போர்கால வரலாறு, குறியீடு உடைக்கும் திறன், ஆழ்கடல் ஆராய்ச்சி ஆகியவற்றின் இணைப்பாகக் கருதப்படுகிறது.


உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியா பின்னடைவு., ஐரோப்பிய நாடுகள் முன்னிலை

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News