Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் இரண்டு இந்திய வம்சாவளி அமைச்சர்கள்

ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் இரண்டு இந்திய வம்சாவளி அமைச்சர்கள்

Lankasri News 5 days ago

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளார்.

அவ்வகையில், தனது அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினர் இரண்டு பேருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார் ஆன்டி பர்னாம்.

அமைச்சரவையில் இரண்டு இந்திய வம்சாவளி அமைச்சர்கள்

ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் பொறுப்பு வாங்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியினரில் ஒருவர், கனிஷ்கா நாராயண்.

செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சராக நாராயணுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, முதன்முறையாக பிரதமரின் அமைச்சரவைக் கூட்டத்திலும் பங்கேற்கும் வாய்ப்பும் நாராயணுக்கு கிடைத்துள்ளது.

நாராயண், இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் பிறந்தவர் ஆவார். தனது 12ஆவது வயதில் வேல்ஸ் நாட்டின் தலைநகரான கார்டிஃபுக்கு புலம்பெயர்ந்தார் அவர்.

2024ஆம் ஆண்டு Vale of Glamorgan தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயண், குறுகிய காலத்திலேயே பல்வேறு முக்கிய பொறுப்புகள் வகித்து, தற்போது செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.


மீண்டும் உள்துறைச் செயலராக ஷபானா மஹ்மூத்... மக்கள் கோரிக்கை

ஏற்கனவே, லிசா நந்தி என்னும் இந்திய வம்சாவளியினர் ஒருவரும் ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.

அவர், கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவையில் கலாச்சாரத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஆவார். ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் அவர் அதே பொறுப்பில் நீடிக்கிறார்.

2010ஆம் ஆண்டு Wigan தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் லிசா.

லிசாவின் தந்தையான தீபக் நந்தி, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News