ஈரான், அமெரிக்காவின் USS Abraham Lincoln விமானம் தாங்கி போர்க்கப்பலை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
ஈரான் இராணுவம், கடற்கரை பகுதியில் இருந்து க்ரூஸ் ஏவுகணைகளை அமெரிக்க கப்பல் நோக்கி ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்க அதிகாரிகள் இதுவரை எந்தவித உறுதிப்படுத்தலையும் வெளியிடவில்லை.
ஈரான் போரால் பிரித்தானியாவில் வீடு கட்டுபவர்களுக்கு புதிய விதிமுறை
ஈரான் கடற்படை தளபதி Rear Admiral ஷஹ்ராம் ஈரானி, "USS Abraham Lincoln எங்கள் ஏவுகணை வரம்புக்குள் வந்தால் தாக்கப்படும். அது எப்போதும் கண்காணிப்பில் உள்ளது" என்று எச்சரித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் "தந்திர சக்தி" தற்போது "தந்திர தோல்வியாக" மாறிவிட்டதாக ஈரான் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம், அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானின் மின்நிலையங்களை தாக்க 48 மணி நேர உத்தரவை வாபஸ் பெற்றார்.
காரணம், ஈரான் எச்சரித்தபடி, அத்தகைய தாக்குதல் நடந்தால், மத்திய கிழக்கில் உள்ள எரிசக்தி மற்றும் மின்சார அமைப்புகள் மீது பதிலடி நடத்தப்படும் என்ற அச்சம்.
இந்த சம்பவம், ஹார்முஸ் நீரிணை மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எரிசக்தி விநியோக பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்கும் வகையில் உள்ளது.
இது உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதை என்பதால், இந்த தாக்குதல் உலகளாவிய சந்தைகளில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
Iran missile attack USS Abraham Lincoln, US Iran conflict 2026 #IranUSConflict #USSAbrahamLincoln

