அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அரசு இரவு விருந்தில், பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது நகைச்சுவையான உரையால் அனைவரையும் கவர்ந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், "அமெரிக்கா இல்லையெனில் ஐரோப்பியர்கள் ஜேர்மன் மொழி தான் பேசுவார்கள்" என்று முன்பு கூறியிருந்தார்.
ஜேர்மனி: 2027-ல் 200 பில்லியன் யூரோ கடன் வாங்க திட்டம்
அதற்கு பதிலளித்த மன்னர் சார்லஸ், "நாங்கள் இல்லையெனில், நீங்கள் பிரெஞ்சு மொழி தான் பேசுவீர்கள்" என்று கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.
250 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு இடையிலான காலனித்துவ போட்டிகளை நினைவூட்டி, அவர் இந்த கருத்தை கூறினார்.
மேலும், வெள்ளை மாளிகையின் ரியல் எஸ்டேட் மறுசீரமைப்பை பற்றி ட்ரம்ப் கூறியதை சுட்டிக்காட்டி, "1814-இல் நாங்களும் வெள்ளை மாளிகையை எரித்தோம்" என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில், மன்னர் சார்லஸ் HMS Trump என்ற பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பலின் மணி ஒன்றை பரிசாக வழங்கினார்.
"இது எங்கள் நாடுகளின் பகிர்ந்த வரலாற்றையும், பிரகாசமான எதிர்காலத்தையும் நினைவூட்டட்டும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த இரவு விருந்து, அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே நட்பு மற்றும் நகைச்சுவை கலந்த உரையாடல்களால் சிறப்பாக அமைந்தது.

இருப்பினும், மன்னர் சார்லஸ் தனது உரையில் அமெரிக்காவிற்கு நுணுக்கமான ஆனால் தாக்கம் மிகுந்த எச்சரிக்கையை விடுத்தார்.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் போது நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் தடையை மீறி ஹார்முஸில் பயணித்த ரஷ்ய பில்லியனரின் சொகுசுப் படகு

