இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்து நாடு வெளிநாட்டு பயணத்தின் முதல் கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) சென்றார்.
அவரது விமானம் UAE வான்வழியில் நுழைந்ததும், F-16 போர் விமானங்கள் சிறப்பு பாதுகாப்பு வழங்கின. இது இந்தியாவிற்கு அமீரகம் அளிக்கும் மரியாதையை வெளிப்படுத்துகிறது.

அதனைத் தொடர்ந்து அபுதாபி விமான நிலையத்தில் மோடிக்கு காவலர் மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர் அவர் UAE ஜனாதிபதி முகமது பின் சாயித் அல் நஹ்யானை சந்தித்து, எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பயணம் மே 15 முதல் மே 20 வரை நடைபெறும் ஐந்து நாடு பயணத்தின் தொடக்கமாகும்.
UAE-க்கு பிறகு மோடி நெதர்லாந்து, ஸ்வீடன், நோர்வே, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளார்.
இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் வர்த்தகம், தொழில்நுட்பம், சுத்தமான எரிசக்தி, புதுமை, பசுமை வளர்ச்சி ஆகிய துறைகளில் இந்தியாவின் பங்கினை வலுப்படுத்துவதாகும்.
இந்தியாவின் பொருளாதார உறவுகள், ஏற்றுமதி வாய்ப்புகள் ஆகியவற்றை விரிவுபடுத்தும் வகையில் இந்த பயணம் முக்கிய பங்கு வகிக்கும் என Federation of Indian Export Organisations (FIEO) குறிப்பிட்டுள்ளது.
இந்தியா-அமீரகம் இடையே பாதுகாப்பு, எரிசக்தி ஒப்பந்தங்கள் கையெழுத்து
#ModiInUAE #IndiaUAE #F16Escort #ModiVisit2026 #TradeTalks #EnergyPartnership #GlobalTour

