Protesters marched in crowborough for asylum camp: பிரித்தானியாவில் முன்னாள் இராணுவத் தளம் புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகமாக மாற்றப்பட்டதையடுத்து போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.
பிரித்தானியாவில் மக்களின் எதிர்ப்பை மீறி, முன்னாள் இராணுவத் தளம் ஒன்று புலம்பெயர்ந்தோருக்கான முகாமாக மாற்றப்பட்டதால் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.
புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகாம்
சசெக்ஸின் Crowborough-யில் முன்னாள் இராணுவத் தளம் ஒன்று, ஆண் புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகாமாக மாற்றப்பட்டது.
பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி: புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறை
ஆனால், அங்கு வசிப்பவர்களின் பாதுகாப்பு, வளங்களின் மீதான அழுத்தம் மற்றும் தளத்தின் அளவு ஆகியவற்றிற்கு எதிராக உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பு எழுந்தது.
அந்த எதிர்ப்பையும் மீறி புகலிட முகாம் செயல்படத் தொடங்கிய நிலையில், அதன் கொள்ளளவை 540 ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர்
இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் குடும்பங்கள் மற்றும் சிறு குழந்தைகள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'Crowborough வேண்டாம் என்கிறது' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி மக்கள் திரண்டனர். இந்த பேரணி இராணுவத் தளத்தில் தொடங்கி நகர மையத்திற்குள் நகர்ந்தது.
அதே சமயம், 'புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்படுகிறார்கள்', 'கருணையே எங்கள் பலம்' மற்றும் 'ஒன்றாக இணைந்தால் வலிமை' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி எதிர் ஆர்ப்பாட்டக்காரர்களும் வந்திருந்தனர்.


