Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Chrome உபயோகிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்- இந்திய அரசு எச்சரிக்கை

Chrome உபயோகிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்- இந்திய அரசு எச்சரிக்கை

Lankasri News 1 week ago

ந்திய அரசு, Google Chrome உபயோகிப்பவர்களுக்கு முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Windows, macOS மற்றும் Linux இயங்குதளங்களில் Chrome உபயோகிக்கும் கோடிக்கணக்கான பயனர்களை பாதிக்கக்கூடிய பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த எச்சரிக்கை, இந்திய கணினி அவசர நிலை எதிர்வினை குழு (CERT-In) மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், Chrome உலாவியில் "Use after free", "Uninitialized use", "Integer overflow", "Out-of-bounds read/write" போன்ற பல்வேறு தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை ஹேக்கர்களுக்கு, பயனர்களின் கணினியில் தீங்கிழைக்கும் குறியீடுகளை (malicious code) இயக்கும் வாய்ப்பை வழங்கக்கூடும். அதாவது, பயனர் தவறுதலாக ஒரு தீங்கிழைக்கும் இணையதளத்தை திறந்தால், ஹேக்கர்கள் கணினியை கட்டுப்படுத்தி, தனிப்பட்ட தகவல்களை திருடும் அபாயம் உள்ளது.


Hero-வின் புதிய Vida VX2 Plus மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்

இந்த குறைபாடுகள், Chrome 150.0.7871.114/.115 க்கு முன்பான பதிப்புகளில் காணப்படுகின்றன. எனவே, பயனர்கள் உடனடியாக Chrome-ஐ புதுப்பிக்க வேண்டும்.

Chrome-இல் "Settings--About--Update Chrome" என்ற வழியில் புதிய பதிப்பை பதிவிறக்கம் செய்யலாம். Google, புதிய அப்டேட்டில் பாதுகாப்பு திருத்தங்களை (security fixes) வெளியிட்டுள்ளது.

Chrome உலகளவில் மிகவும் பிரபலமான உலாவி என்பதால், இந்த பாதுகாப்பு குறைபாடுகள் தரவு கசிவு மற்றும் தனிப்பட்ட தகவல் திருட்டு போன்ற அபாயங்களை ஏற்படுத்தும்.

பயனர்கள், தங்கள் கணினி மற்றும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க உடனடியாக Chrome-ஐ அப்டேட் செய்வது மிக அவசியம்.


ஹூண்டாய் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தவுள்ள 4 புதிய SUV கார்கள்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News