ட்ரம்ப் ஒரு மணி நேரத்தில் 7 பொய்களை கூறியதாக ஈரான் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணை திறப்பு
லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தியதால், போர் நிறுத்தம் அமுலில் உள்ளவரை ஹார்முஸ் நீரிணையை திறப்பதாக ஈரான் அறிவித்தது.

ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டாலும், ஈரானுடனான நமது பரிவர்த்தனை 100% நிறைவடையும் வரை, ஈரானைப் பொறுத்தவரை மட்டும் கடற்படை முற்றுகை தொடரும் என ட்ரம்ப் அறிவித்தார்.
மேலும், இனி ஹார்முஸ் நீரிணையை ஒரு போதும் மூடமாட்டோம் என ஈரான் உறுதியளித்தது போன்ற பல்வேறு பதிவுகளை ட்ரம்ப் தனது Truth Social பக்கத்தில் வெளியிட்டார்.

ஆனால் ட்ரம்ப்பின் கருத்துக்களை மறுத்துள்ள ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், அவர் கூறிய அனைத்தும் பொய் என தெரிவித்துள்ளார்.
யுரேனியம் ஈரானை விட்டு எங்கும் செல்லாது: டிரம்பிற்கு ஈரான் கொடுத்த அதிர்ச்சி
ட்ரம்ப் சொன்ன 7 பொய்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ட்ரம்ப் ஒரு மணி நேரத்தில் 7 பொய்களை கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் பொய்களால் அவர்கள் போரில் வெற்றி பெறவில்லை, பேச்சுவார்த்தைகளிலும் நிச்சயமாக எந்த முன்னேற்றமும் காணப்போவதில்லை.
அமெரிக்காவின் முற்றுகை தொடர்வதால், ஹோர்முஸ் நீரிணை திறந்திருக்காது.
ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணம் செய்யும் கப்பல்கள், குறிக்கப்பட்ட வழித்தடத்தின் அடிப்படையிலும் ஈரானிய அங்கீகாரத்துடனுமே மேற்கொள்ளப்படும்.
ஹோர்முஸ் நீரிணை திறந்திருக்கிறதா அல்லது மூடப்பட்டிருக்கிறதா என்பதும், அதை நிர்வகிக்கும் விதிமுறைகளும் சமூக ஊடகங்களால் தீர்மானிக்கப்படுவதில்லை, களத்தின் மூலமே தீர்மானிக்கப்படும்.
ஊடகப் போரும், பொதுக் கருத்தை வடிவமைப்பதும் போரின் ஒரு முக்கியப் பகுதியாகும், மேலும் இந்தத் தந்திரங்களால் ஈரானிய தேசம் பாதிக்கப்படுவதில்லை" என தெரிவித்துள்ளார்.

