Dailyhunt
இன்று முதல்., அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை

இன்று முதல்., அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை

Lankasri News 0 months ago

ரான் புரட்சிகர காவல்படை (Revolutionary Guards) அறிவிப்பில், அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் (ஏப்ரல் 1) Apple, Google, Meta, Microsoft, Tesla, Boeing உள்ளிட்ட 18 நிறுவனங்கள் குறிவைக்கப்பட உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


10 மில்லியன் ரியால் நோட்டை வெளியிட்ட ஈரான்- பொருளாதார நெருக்கடி தீவிரம்

இந்த நிறுவனங்கள் ஈரான் தலைவர்களின் "திட்டமிட்ட படுகொலை" நடவடிக்கைகளில் பங்கு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

"ஒவ்வொரு படுகொலைக்கும் பதிலாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரிவுகள் அழிக்கப்படும்" என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் உடனடியாக தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரான், இந்த நிறுவனங்களை "தீவிரவாத நிறுவனங்கள்" எனக் குறிப்பிட்டு, அவற்றைச் சுற்றியுள்ள மக்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வெளியேற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரான் தலைவர்கள் பலர் உயிரிழந்த நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.


25 ஆண்டுகளுக்கு பின்னர் கையிருப்பு தங்கத்தை விற்க தொடங்கிய புடின்

உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் புரட்சிகர காவல்படை தலைமை தளபதி முகமது பாக்பூர் உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி ஈரான் தலைமைத்துவத்தை முற்றிலும் அழிக்க முயற்சிக்கிறது என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதனால், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தும் எச்சரிக்கை, சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

#IranWar #USTechFirms #Google #Meta #Apple #Microsoft #Tesla #IranConflict #WorldNews #BreakingNews
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News