ஜேர்மன் சேன்ஸலர் அலுவலகத்தில், ஜேர்மன் முன்னாள் சேன்ஸலர்களின் உருவப்படங்கள் இடம்பெற்றுள்ள இடத்தில், ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலரின் உருவப்படமும் இடம்பெற உள்ளது.
ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலர்

ஏஞ்சலா மெர்க்கல் ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலர் ஆவார். இன்றைய நிலவரப்படி, அவர் ஜேர்மனியின் ஒரே பெண் சேன்ஸலரும்கூட.
இந்நிலையில், ஜேர்மன் சேன்ஸலர் அலுவலகத்தில், ஜேர்மன் முன்னாள் சேன்ஸலர்களின் உருவப்படங்கள் இடம்பெற்றுள்ள இடத்தில், ஏஞ்சலாவின் உருவப்படமும் இடம்பெற உள்ளது.
நேற்று மாலை தனது உருவப்படத்தை ஏஞ்சலா திறந்துவைத்த நிலையில், இன்று முதல், அதாவது, ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல், அக்டோபர் மாதம் 4ஆம் திகதிவரை, ஏஞ்சலாவின் உருவப்படம் பெர்லினிலுள்ள Bode அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
ஜேர்மனியில் சில்லறை வர்த்தகம் எதிர்பாராதவிதமாக அதிகரிப்பு
ஏஞ்சலாவின் உருவப்படத்தை ஓவியமாக தீட்டியவர், அதிகம் பிரபலமாகாத ஓவியரான Jeremie Queyras (28) என்பவர் ஆவார்.

