Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தித்திக்கும் சுவையில் பால் பணியாரம்.., எப்படி செய்வது?

தித்திக்கும் சுவையில் பால் பணியாரம்.., எப்படி செய்வது?

Lankasri News 1 month ago

செட்டிநாடு உணவுகளில் பால் பணியாரம் மிகவும் பிரபலமான இனிப்பு வகை.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பால் பணியாரத்தை விரும்பி உண்ணுவார்கள்.

அந்தவகையில், தித்திக்கும் சுவையில் பால் பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி- 1 கப்
  • உளுந்து- 1 கப்
  • தேங்காய்- 1
  • சர்க்கரை- தேவையான அளவு
  • ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
  • உப்பு- 1 சிட்டிகை
  • எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை

முதலில் அரிசி மற்றும் உளுந்து சேர்த்து நன்கு கழுவி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

பின் இதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து மிக்ஸியில் தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து தேங்காய் பாலை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

இதனையடுத்து தேங்காய் பாலில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

பின்னர் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் அரைத்த மாவை சிறிது சிறிது உருண்டையாக சேர்த்து பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

இறுதியாக பொரித்த பணியாரத்தை தேங்காய் பாலில் சேர்த்தால் சுவையான செட்டிநாடு பால் பணியாரம் தயார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News