அஹமதாபாதிலுள்ள பங்களா ஒன்றில் பேய் நடமாடுவதாகவும், அது உயிர் பலி வாங்குவதாகவும் செய்திகள் பரவத்துவங்கின.
அவற்றை மூட நம்பிக்கை என்று விட்டுவிடாமல் பொலிசார் துவக்கிய ரகசிய விசாரணை ஒன்று, 34 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த குற்றச்செயல் ஒன்றை வெளிக்கொணர்ந்துள்ளது.
உயிர் பலி வாங்கும் பேய் பங்களா...
அஹாதாபாதிலுள்ள வீடு ஒன்றில் பேய் உலாவுவதாகவும், அது உயிர் பலிவாங்குவதாகவும் செய்திகள் பரவத்துவங்கியுள்ளன.
அந்த வீட்டில் வாழ்ந்துவந்த ஷம்சுதீன் 2015இல் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார், அடுத்தடுத்த ஆண்டுகளில் ஷாலியாபீவி பதான் மற்றும் ஜவ்ராவாலா ஆகிய இருவர் உயிரிழந்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து, மந்திரவாதியின் உதவியுடன் பேய் விரட்டும் சடங்குகள் அங்கு நடத்தப்பட்டுள்ளன.
இவற்றை எல்லாம் ரகசியமாக ஆள் வைத்து கண்காணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் பொலிசார்.
கோகினூர் வைரத்தை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் - மன்னர் சார்லசிடம் வலியுறுத்தும் மம்தானி
பல்வேறு தகவல்கள் உறுதியானதும், அந்த வீட்டில் குறிப்பிட்ட இடத்தை பொலிசார் ஆள் வைத்து தோண்ட, அந்த பள்ளத்திலிருந்து, ஆறு பற்களும் ஏழு முதல் எட்டு எலும்புகளும் கிடைக்க, கிடைத்த தகவல்களின்படி அங்கு ஒரு கொலை நிகழ்ந்தது உறுதியாகியுள்ளது.
பொலிசார் கண்டுபிடித்த உண்மை
விடயம் என்னவென்றால், 1992ஆம் ஆண்டு, காதலர்களான ஃபர்ஸானாவுக்கும் (Farzana Radhanpuri, 40) ஷம்சுதீனுக்கும் (Shamsuddin Khedawala) இடையில் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.
ஷம்சுதீன் ஏற்கனவே திருமணமானவர். ஆக, அவரது மனைவிக்கு கொடுத்த சொத்துக்கு இணையாக தனக்கும் சொத்து வேண்டும் என கேட்டு சண்டையிட்டுள்ளார் ஃபர்ஸானா.
மும்பை பெண்ணான ஃபர்ஸானாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஷம்சுதீன், அவரை அஹமதாபாதிலுள்ள தன் நண்பரான ஷாலியாபீவி வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.
அங்கு வைத்து, ஷம்சுதீனீன் சகோதரரான இக்பால் கேதாவாலா ஃபர்ஸானாவின் கால்களையும், அப்துல் ஜாவ்ராவாலா என்பவர் கைகளையும் பிடித்துக்கொள்ள, ஷம்சுதீன் ஃபர்ஸானாவைக் கொலை செய்துள்ளார்.
பின்னர் அந்த வீட்டில் செப்டிக் டேங்க் இருந்த இடத்தில் பள்ளம் தோண்டி, அங்கு ஃபர்ஸானாவின் உடலை புதைத்துள்ளனர்.
ஆளாளுக்கு எதுவுமே தெரியாததுபோல் தங்கள் வாழ்வைத் தொடர்ந்தாலும், குற்ற உணர்ச்சியும் பயமும் யாரையும் விடவில்லை.

