வெயில் காலத்தில் சருமத்தில் பல பிரச்சனைகள் வந்தடைகின்றன.
அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள், வறண்ட சருமம் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அதேபோல், முகத்தில் ஏற்படும் வறண்ட சருமம் என்பது சருமத்தில் ஈரப்பதம் அல்லது எண்ணெய் பசை குறையும் போது உண்டாகிறது.
கருப்பான முகத்தை உடனடியாக பொலிவாக்க உதவும் மஞ்சள்.., எப்படி பயன்படுத்துவது?
இது தோல் இறுக்கம், செதில்களாக உரிதல் மற்றும் அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.
அந்தவகையில், முகம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க உதவும் பேஸ்பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- வாழைப்பழம்- 1
- தேன்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் பழுத்த வாழைப்பழம் சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும்.
பின் இதில் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு இதனை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
இதற்கடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. தேவையான பொருட்கள்
- பால்- 3 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவேண்டும்.
நரைமுடியை கருப்பாக்க உதவும் காபி பொடி.., எப்படி பயன்படுத்துவது?
பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர வறண்டு சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

