Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கொளத்தூரை பறித்த ஸ்டாலின்? சேகர் பாபுவுக்கு செக் வைத்த திமுக மறுசீரமைப்பு!

கொளத்தூரை பறித்த ஸ்டாலின்? சேகர் பாபுவுக்கு செக் வைத்த திமுக மறுசீரமைப்பு!

டந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக செயற்குழுக் கூட்டத்தில், கட்சியை மறுகட்டமைப்பு செய்யும் வகையில் சில முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக, மாவட்டச் செயலாளர்களுக்கான வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக அதிகரிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, எந்தெந்தக் கழக மாவட்டங்களில் எந்தெந்தத் தொகுதிகள் அடங்குகின்றன என்பதைக் கூறும் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

 Sekar babu and stalin in kolathur

ஸ்டாலின் பதிவு

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

அப்போது, "நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை? காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்" எனப் பேசியிருந்தேன்.

கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன்.

கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும்.

உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!" என்று பதிவிட்டுள்ளார்.

 stalin in kolathur

சென்னையில் பெரும் தோல்வி!

புதிய மறுசீரமைப்பின்படி, சென்னை வடகிழக்கு, வடக்கு, வடமேற்கு, மத்தி, மத்திய கிழக்கு, மத்திய மேற்கு, கிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு ஆகிய 10 கழக மாவட்டங்களின் கீழ் 21 தொகுதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தலைநகர் சென்னை திமுகவின் கோட்டை என்ற நிலையைப் புரட்டிப் போட்டன சட்டமன்றத் தேர்தல் முடிவுகள். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் கட்சித் தலைவர் ஸ்டாலினின் தோல்வி அனைவரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

கொளத்தூரில் அதிகாரத்தை இழக்கும் சேகர் பாபு

அதிமுகவிலிருந்து பிரிந்து, கடந்த 2011ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தவர் சேகர் பாபு. இணைந்தது முதலே நாளுக்கு நாள் கட்சியில் அவரது செல்வாக்கு அதிகரித்தது. கடந்த சில ஆண்டுகளாகத் தலைமை குடும்பத்தின் நெருங்கிய புள்ளியாக வலம் வந்தார். இது கழக நிர்வாகிகள் பலரை காழ்ப்புணர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தாலும், அவரது செல்வாக்கு அசைக்க முடியாததாக இருந்தது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் கட்சித் தலைவர் ஸ்டாலினை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு மாவட்டச் செயலாளரான அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக கொளத்தூரில் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார்.

இதனால், கட்சிக்குள்ளேயே பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டார் சேகர் பாபு.

இந்தத் தோல்வி மு.க.ஸ்டாலினை பர்சனலாக பாதித்துள்ளது. நிர்வாகிகளின் அறிவுரையைக் கேட்டு, சேகர் பாபுவை கொளத்தூர் பொறுப்பில் இருந்து விலக்க முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த முடிவு புதிய மாவட்டச் செயலாளர்கள் பிரிப்பில் எதிரொலித்துள்ளது.

 Chennai DMK

வட சென்னையில் திருவொற்றியூர், மாதவரம் தொகுதிகளை சென்னை வடகிழக்கு மாவட்டமாகவும், பெரம்பூர், கொளத்தூர் தொகுதிகளை சென்னை வடக்கு மாவட்டமாகவும், துறைமுகம், திரு.வி.க. நகர், வில்லிவாக்கம் தொகுதிகளை சென்னை கிழக்கு மாவட்டமாகவும் பிரித்துள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு துறைமுகம், கொளத்தூர் என இரண்டு தொகுதிகளையும் பார்த்துக்கொண்டார் சேகர் பாபு. தற்போதைய மறுசீரமைப்பில், கொளத்தூர் சென்னை வடக்கு மாவட்டத்திலும், துறைமுகம் சென்னை கிழக்கு மாவட்டத்திலும் பிரிக்கப்பட்டிருக்கிறது.

இதனால், அவரது சொந்த தொகுதியான துறைமுகம் அடங்கியுள்ள சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டால், கொளத்தூரில் அவரது பிடிப்பை இழப்பார். இது தலைமையின் திட்டமிடப்பட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

கொளத்தூரில் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் வழக்குத் தொடுத்துள்ளார். அதில் அவர் வெற்றி பெற்றாலோ அல்லது மீண்டும் தேர்தல் நடந்தாலோ, இது சேகர் பாபுவுக்குப் பலத்த பின்னடைவாகப் பார்க்கப்படும்.

மோடி, ராகுலுக்கு பிறகு விஜய்? INDIA வேட்பாளர், அடுத்த பிரதமர்! சர்வேயில் அதிர்ச்சி!— இரா.செல்வேந்திரன் திமுக (@selvadmk96)

யார் இந்த பூண்டி கலைவாணன்? இவரது கதை என்ன என்பதை Gen z களும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு!

பூண்டி கலைசெல்வன் கொலை வழக்கு!

கலைஞர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில், திமுகவுக்கு நெருக்கமான குடும்பத்தில் பிறந்தவர் பூண்டி கலைவாணன். இவரது அண்ணன் பூண்டி கலைசெல்வன் திமுக மாவட்டச் செயலாளராக இருந்தார். கருணாநிதிக்கு நெருக்கமான தளபதியாகவும் இருந்தார்!

எப்போதும் இளைஞர்கள் சூழ, பலத்த பாதுகாப்புடன் வலம் வருபவர் கலைசெல்வன். 2004-ம் ஆண்டு கொரடாச்சேரியில் நடந்த அதிமுக பிரமுகர் கோவி சம்பத் கொலை வழக்கில் கலைசெல்வன் முதல் குற்றவாளியாக இருந்தார். அப்போது முதலே இருதரப்புக்கும் இடையிலான பகை தொடர்ந்தது.

 பூண்டி கலைசெல்வன்

திருவாரூர் சுற்றுவட்டாரத்தில் ஒரு டெண்டர் கூட பூண்டி கலைசெல்வனைத் தாண்டிச் செல்லாத அளவுக்கு கட்டி ஆண்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அவருக்கு எதிரிகளும் அதிகரித்தனர்.

2007-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டமே நடுங்கும் வகையில், ஒரு கும்பல் கலைசெல்வனை கொலை செய்தது.

அண்ணனின் இடத்துக்கு வந்த கலைவாணன், கலைஞரின் இடத்தை நிரப்பினார்!

கலைசெல்வன் கொலையால் கொதித்தெழுந்த திமுக தொண்டர்கள், பேருந்துகளை எரித்தனர். கொலையில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட அதிமுகவினரின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர். திருவாரூரே கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த நெருப்பில் உருவானவர் பூண்டி கலைவாணன்.

கலைசெல்வனின் இறப்புக்குப் பிறகு, அவரது குடும்ப உறுப்பினர்கள் திமுகவின் உள்ளூர் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டனர். புதிய மாவட்டச் செயலாளராகப் பதவியேற்ற பூண்டி கலைவாணனின் வாழ்க்கையில் இந்த நாட்கள் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.

கருணாநிதி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவரது தளபதியாக இருந்து தொகுதியைப் பார்த்துக்கொண்டவர் பூண்டி கலைவாணன்.

2019-ம் ஆண்டு கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், அவரது மகன் மு.க. ஸ்டாலின்தான் போட்டியிடுவார் என்றும், கருணாநிதியின் இடத்தில் ஸ்டாலின்தான் வர வேண்டும் என்றும் பேச்சுகள் எழுந்தன.

ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், பூண்டி கலைவாணன் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றார். கலைஞரின் தொகுதியில் எம்எல்ஏ ஆனார். அதை காலவாணனின் தொகுதியாக மாற்றினார்.

ஆரம்ப காலம் முதலே திருவாரூர் திமுகவுக்கு மிக முக்கியமான மாவட்டமாகும். அங்கே கலைசெல்வன் கட்டிக் காப்பாற்றிய உள்ளூர் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி, திருவாரூரில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார் கலைவாணன். இதற்காக அவர் கொடுத்த விலை பெரிது.

2019-ம் ஆண்டைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் கலைவாணன் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தார்.

பூண்டி கலைவாணனின் அரசியல் பயணம் திமுக கட்சியின் உள்ளூர் அமைப்புப் பணிகளுடன் தொடங்கியது. இப்போது சட்டமன்றத்தில் தனித்து தெரியும் தலைவராக வளர்ந்துள்ளார்.

49 வழக்குகள், குண்டர் சட்டம், அடங்காத ஆதரவாளர் படை!

ஒரு கொலையால் அரசியல் தலைவரான இவருக்கு எதிர்மறையான முகமும் உள்ளது. மாவட்டச் செயலாளராகப் பதவியேற்ற காலத்தில், அதிமுகவினர் மீதான வன்முறைச் சம்பவங்களால் இவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு, 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 3 மாதங்கள் சிறையில் இருந்த அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் இப்போதும் 49 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது ஆதரவாளர்கள் படையைத் தாண்டி, திருவாரூரில் அணுவும் அசையாது எனக் கூறப்படுகிறது.

பூண்டி கலைவாணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட புகார்கள் உள்ளன. அவர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு வருவதற்கு முன்னரே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் உள்ளன.

தற்போதும் திருவாரூர் நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் சம்பவங்களில் இவருக்குத் தொடர்பு இருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவதுண்டு. இதனை எதிர்த்துக் கேள்வி எழுப்புபவர்களைச் சமாளிக்க ஆள் பலமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

எத்தனை பிரச்சினைகள் வந்தாலும், அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பார் கலைவாணன். ஏனென்றால், தலைமையில் இருக்கும் குடும்பத்துக்கும் அவருக்குமான பந்தம் அப்படிப்பட்டது. தீவிர விசுவாசியாக தன்னை நிரூபித்துள்ளார். திமுக கட்சியை மறுகட்டமைப்பு செய்து வரும் சூழலில், அவருக்கு புதிய மாநிலப் பதவிகள் வழங்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தவெக vs திமுக: பேரவையில் நீடித்த பதட்டம்... ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திரண்ட திமுக! — ANI (@ANI)

எனவே, ஜோசப் விஜயைத் தனியாகச் சந்தித்துப் பேச வேண்டும் என்று அவர்களிடம் கூறினேன். அவரைச் சந்திப்பதற்காக செப்டம்பர் 10-ஆம் தேதி எனக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள்.

அந்தச் சந்திப்புக்கான வாய்ப்பிற்காக நான் காத்திருக்கிறேன். எனவே, இறைவனின் அருளால் நான் விரைவில் தவெகவில் இணைவேன்." என்றிருக்கிறார்.

கேரளாவில் வளர்ந்து வரும் தவெக கிளைக்கு இவர்தான் தலைவராக இருப்பார் என்று பலரும் ஆரூடம் கூறுகின்றனர்.

நாடு முழுவதும் தவெக... விஜய் பிரதமர்?

கடந்த சில நாட்களாக தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தைத் தாண்டி வளருவதில் கவனம் செலுத்தி வருகிறது. வட இந்தியாவில் இன்ஃப்ளூயன்சர்கள் மூலமாக விஜய்க்கு புரோமோஷன் செய்யும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தவெக அமைச்சர்கள் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி மேடைகளில் முழங்கி வருகின்றனர். இதன் அடுத்தகட்டமாகவே கேரளாவில் தவெக கிளையை வலிமையாக்கும் பணிகள் நடக்கின்றன. தமிழகத்துக்கு அடுத்தபடியாக கேரளாவில் விஜய்க்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். இதனால், அண்டை மாநிலங்களில் கட்சியை விரிவுபடுத்தும் பணியைத் தொடங்க கேரளா சிறந்த தேர்வாக உள்ளது.

அடுத்ததாக தென் மாநிலங்களிலும் வட இந்தியாவிலும் விஜய்யின் பிம்பத்தைக் கட்டமைத்து தவெகவை வேரூன்ற வைக்கும் பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரந்தூர் விமான நிலையம்: "ஆந்திரா, கர்நாடகாவுக்கு கொண்டாட்டம்" - முதலமைச்சரின் முடிவுக்கு எதிர்ப்பு ஏன்?
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal