Dailyhunt
மன அழுத்தம் உங்களை பாடாய்படுத்துதா? வெறும் 5 நிமிஷம் போதும்.. உங்க மைண்டை ரிலாக்ஸ் பண்ண இதோ எளிய வழி!

மன அழுத்தம் உங்களை பாடாய்படுத்துதா? வெறும் 5 நிமிஷம் போதும்.. உங்க மைண்டை ரிலாக்ஸ் பண்ண இதோ எளிய வழி!

ன்றைய அவசர உலகில் வேலைப்பளு, குடும்பப் பிரச்சனைகள் மற்றும் கடன் தொல்லைகளால் பலரும் மன அழுத்தத்திற்கு (Stress) ஆளாகிறார்கள்.

மன அழுத்தம் என்பது வெறும் மனதோடு முடிந்துவிடாமல், ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் தூக்கமின்மைக்கும் வழிவகுக்கிறது. இதிலிருந்து விடுபட ஒரு நாளைக்கு வெறும் 5 நிமிடம் நீங்கள் செய்யும் தியானம் (Meditation) மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தியானம் செய்ய நீங்கள் காடுகளுக்கோ அல்லது மலைகளுக்கோ செல்லத் தேவையில்லை.

உங்கள் வீட்டில் ஒரு அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அமருங்கள். கண்களை மூடிக்கொண்டு உங்கள் சுவாசத்தைக் கவனியுங்கள். மூச்சை உள்ளே இழுக்கும்போதும், வெளியே விடும்போதும் உங்கள் கவனம் முழுவதும் மூச்சின் மீதே இருக்கட்டும். இடையில் மற்ற சிந்தனைகள் வந்தால் கவலைப்பட வேண்டாம், மீண்டும் மெதுவாக உங்கள் கவனத்தை மூச்சின் மீது கொண்டு வாருங்கள். இப்படிச் செய்வது உங்கள் மூளையில் உள்ள நரம்புகளை அமைதிப்படுத்தி, தேவையற்ற கவலைகளை மறக்கச் செய்யும்.

தொடர்ந்து தியானம் செய்வதால் உங்கள் கவனிக்கும் திறன் (Concentration) அதிகரிக்கும். வேலையில் அல்லது படிப்பில் உங்களால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும். பதற்றமான சூழலில் கூட அமைதியாக முடிவெடுக்கும் ஆற்றல் உங்களுக்குக் கிடைக்கும். 5 நிமிடம் தியானம் செய்வது என்பது உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொள்ளும் ஒரு சிறிய ஓய்வு போன்றது. இது உங்கள் இதயத் துடிப்பைச் சீராக்கி, உடலுக்கு ஒருவிதமான லேசான உணர்வைத் தரும்.

இரவு தூங்குவதற்கு முன் அல்லது காலை எழுந்தவுடன் இந்த 5 நிமிட தியானத்தைச் செய்யலாம். இதனால் ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதோடு, அடுத்த நாள் காலை உற்சாகமாகப் பணியைத்தொடங்கலாம். மன அமைதி இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும். எனவே, எவ்வளவு வேலை இருந்தாலும் உங்களுக்காக இந்த 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal