Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மாணவியை படுக்கையறைக்கு அழைத்த டீச்சரின் 'மருமகன்'! பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த மாமியார்..

மாணவியை படுக்கையறைக்கு அழைத்த டீச்சரின் 'மருமகன்'! பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த மாமியார்..

காராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்து வரும் மாணவி, பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வந்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

மும்பை நாக்கா காவல் நிலையத்தில், தனியார் ஆசிரியை மற்றும் அவரது மருமகன் மீது, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணையை தொடங்கி இரு சந்தேக நபர்களையும் தேடத் தொடங்கியுள்ளனர். காவல்துறையின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட சிறுமி, ஜூலை 2024 முதல் மும்பை நாக்கா பகுதியின் பக்கல் சாலையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி வகுப்பில் பயின்று வந்துள்ளார். பாதிக்கப்பட்டவரின் பலவீனமான நிலையை குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாக காவல்துறை கூறுகிறது.

ஆசிரியை மாணவியை அவளது படுக்கை அறைக்கு அனுப்புவார் என்றும், இது தண்டனை என்றும் விவரிக்கப்படுகிறது என காவல்துறை கூறுகிறது. அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவருக்காக அவரது மருமகன் அந்த அறையில் காத்திருப்பார், என்றும் மாணவியை இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் பலவந்தம், மிரட்டல் அல்லது பிற வழிகளைப் பயன்படுத்தினாரா என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. புகார்தாரர், அந்தக் குறிப்பிட்ட அறையில் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக குற்றம் சாட்டியுள்ளார்.

தாக்கல் செய்யப்பட்ட புகாரின்படி, பாதிக்கப்பட்டவர் காவல்துறையிடம், "ஜூலை 2024 முதல் நவம்பர் 2025 வரை, நான் நாசிக், பக்கால் சாலை, குல்ஷன் காலனியில் ரஷேதா ஷேக் என்ற ஆசிரியை நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றுள்ளார். ரஷேதா ஷேக் பல்வேறு காரணங்களைக் கூறி, சில சமயங்களில் தண்டனையாகவும் அந்த மாணவியை அவரது படுக்கையறைக்கு அனுப்புவார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். அங்கு, காத்திருக்கும் அவரது மருமகனான சிப்தென் ரஸா ஷேக், மாணவியின் விருப்பத்திற்கு மாறாக, அவளை வலுக்கட்டாயமாக பாலியல் செயல்களில் ஈடுபடுத்துவர்" என்றும் கூறியுள்ளார்.

மும்பை நாக்கா காவல் நிலையத்தின் காவல் உதவி ஆய்வாளர் எம்.எல். ஷேக் கூறுகையில், "இரு சந்தேக நபர்களும் மாணவியை மிரட்டியதாகவும், யாரிடமும் சொல்லக் கூடாது என்பதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் கூறியுள்ளார். சிப்தென் தொடர்ந்து பலமுறை அவரை வலுக்கட்டாயமாகத் தாக்கியதால், அவர் மிகுந்த அச்சத்தில் இருந்து வந்ததாகவும்" தெரிவித்தார்.

"பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில், மும்பை நாக்கா காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளோம். ஆசிரியை ரஷேதா ஷேக் மற்றும் முக்கிய சந்தேக நபரான சிப்தென் ஷேக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதிலிருந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு காவல் குழு அனுப்பப்பட்டுள்ளது," என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதேபோன்ற துன்புறுத்தலுக்கு உள்ளான வேறு சிறுமிகள் உள்ளனரா? என்பது குறித்தும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal