திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேர் பகுதியில் உள்ள தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அம்மோனியா வாயு கசிவு குறித்து பேரவையில் விவாதிக்க திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திய நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களை முதலில் பேச அனுமதிக்காமல் 110 விதியின் கீழ் அமைச்சர் பர்வேஸை விளக்கம் அளிக்க பேரவைத் தலைவர் அழைத்ததால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்ட விதிமுறைகளை மீறி பேரவை தலைவர் செயல்படுகிறார் என எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

