பெங்களூரு என பெயர் மாற்றியதற்கு பிறகு நேற்று (மார்ச் 25) நடந்த 2-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.
நங்கூரம் போல நின்ற கோலி (75) அவுட் ஆகியபின், ஒருகட்டத்தில் பஞ்சாப் எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்ற நிலை இருந்தது.
அப்போது உள்ளே வந்த பினிஷர் தினேஷ் கார்த்திக், மஹிபால் லாம்ரோருடன் இணைந்து பெங்களூரை வெற்றி பெறச்செய்தார். கடந்த 5 போட்டிகளில் சொந்த மண்ணில் ஆடிய அணிகளே வென்று இருந்தன.
RCB vs PBKS: 'தூதுவன் வந்தான்' வென்றது பெங்களூரு… கோலி கொண்டாடிய ரசிகர்கள்!
அதோடு சென்னைக்கு எதிராக பெங்களூரு அணி தோல்வியை தழுவியதால் இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பும் இந்தமுறை அதிகமாக இருந்த நிலையில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வென்றுள்ளது.
இதையடுத்து ரசிகர்களின் உற்சாகம் தற்போது கரைபுரண்டு ஓடிவருகிறது. தங்களது உற்சாக மனநிலையை சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர். அதிலிருந்து சில மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

