வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே (மார்ச் 17) கடைசி நாள் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளில் இருந்து, 10 நாட்களுக்கு
முன்னர் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
அதன்படி தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் வரும் 20ம் தேதி துவங்கி, 27 ம் தேதி நிறைவடைய உள்ளது. எனவே," வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க விரும்புவோர், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க இன்றே கடைசி நாள்" என தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.

