Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கோடைக் காலத்தில் முகம் பொலிவுடன் இருக்க.. இந்த காய்கறிகள் போதும்..!

கோடைக் காலத்தில் முகம் பொலிவுடன் இருக்க.. இந்த காய்கறிகள் போதும்..!

Minnambalam 1 month ago

கோடையில் உங்கள் முகம் பொலிவுடன் (Face Glowing) இருக்க இயற்கையான வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பார்க்கலாம்.

மோசமான வாழ்க்கை முறை, அதிகரித்து வரும் மாசுபாட்டின் காரணமாக மக்கள் சருமம் பாதிக்கப்படுகின்றன. சூரிய ஒளி, தூசி மற்றும் ரசாயனப் பொருட்களின் பயன்பாடு ஆகியவை சருமத்தின் பொலிவைக் குறைக்கலாம். இதனை சரிசெய்ய பலரும் விலை உயர்ந்த முக அழகு சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், நீங்கள் வீட்டுக் குறிப்புகள் மூலம் இயற்கையாகவே உங்கள் சருமத்தை (brighten the skin) பொலிவாக்கலாம். உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் தயிர் போன்ற சில பொதுவான சமையலறைப் பொருட்கள் உங்கள் சருமத்திற்கு இயற்கையான வெளுப்பானாகச் செயல்படும்.

உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கு சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உருளைக்கிழங்கில் உள்ள நொதிகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை சருமத்தில் உள்ள கறைகளை (Potato for skin) மங்கச் செய்ய உதவுகின்றன. ஒரு உருளைக்கிழங்கைத் துருவி, அதன் சாற்றைப் பிழிந்து, அதை நேரடியாக முகத்தில் தடவ வேண்டும். சுமார் 10-15 நிமிடங்களுக்குப் பிறகு, சாதாரண நீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இதனை பயன்படுத்துவது படிப்படியாக சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி உங்களுக்கு இயற்கையான பொலிவான சருமத்தைத் தரும்.

தக்காளிக் கூழ்

தக்காளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்டான லைக்கோபீன் உள்ளது. இவை சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. தக்காளிக் கூழுடன் சிறிதளவு ரோஸ் வாட்டரைக் கலந்து பசைபோல் ஆக்கி, அதை முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் முகத்தைக் கழுவவும். இது சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் (tomato for skin) வைத்திருப்பதுடன், படிப்படியாகக் கரும்புள்ளிகளையும் குறைக்கிறது.

தயிர் + தேன் கலவை

தயிர் மற்றும் தேன் கலவையும் சருமத்திற்கு (Yogurt + honey for face) மிகவும் பயனுள்ள ஒரு வீட்டு வைத்தியமாகக் கருதப்படுகிறது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. இவ்விரண்டையும் கலந்து செய்த பசையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது சருமத்தை மென்மையாக்கி, பொலிவின்மையைக் குறைக்கிறது.

ரசாயனங்கள் இல்லாமல் உங்கள் சரும அழகை மேம்படுத்த விரும்பினால், இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் பயனுள்ளதாக இருக்கும். வழக்கமான பராமரிப்பு மற்றும் ஆரோக்கியமான உணவுடன் இவற்றை பின்பற்றுவதன் மூலம், நீங்கள் இயற்கையாகவே தெளிவான, பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam