Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சி.ஏ.ஏ.வை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம்: ஸ்டாலின் அறிவிப்பு!

சி.ஏ.ஏ.வை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம்: ஸ்டாலின் அறிவிப்பு!

Minnambalam 2 years ago

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

will not implement CAA in Tamil Nadu

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. சென்னை, டெல்லி என பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு சிஏஏ-வை அமல்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் சிஏஏவுக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இதுகுறித்து இன்று (மார்ச் 12) அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,

" நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் ஒன்றிய பா.ஜ.க அரசு இருந்துவரும் வேளையில்,

பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசர கதியில் நேற்று அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல;

பலவகையான மொழி, இன, மதம் மற்றும் வாழ்விட சூழல் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்துவரும் இந்திய மக்களின் நலனுக்கும், இந்திய தாய்த் திருநாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானதாகும்.

அதுமட்டுமல்ல சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம்.

இதன் காரணமாகத்தான் திமுக அரசு அமைந்தவுடனேயே, அதாவது, கடந்த 8-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து.

அதனை நிறைவேற்றி, இச்சட்டத்தினைத் திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு அதனை அனுப்பி வைத்தோம் தமிழ்நாட்டைப் போலவே, பல்வேறு மாநிலங்களும் இதனை எதிர்த்து குரல் கொடுத்து வந்துள்ளன.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்களை திசைதிருப்பும் நோக்கத்துடன் தேர்தல் அரசியலுக்காக இந்தச் சட்டத்தை தற்போது நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதோ என கருத வேண்டியிருக்கிறது.

இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை.

இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன் ரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் இந்த அரசின் கருத்தாகும்.

எனவே, ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது.

நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரியா

சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தது ஏன்? - சரத்குமார் பேட்டி!

IPL 2024: CSK-வின் கேப்டன் ஆகிறாரா ரோகித் சர்மா?

கோவைத் தொகுதியை சிபிஎம் விட்டுக்கொடுத்தது ஏன்?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam