தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளதால் பாஜகவுக்கு ஆதரவான வாக்குகள் கிடைக்கும் என்று பிரதமர் மோடி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
கேள்வி:
தமிழ்நாட்டில் 2 வகையான வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஒன்று திமுக ஆதரவு. மற்றொன்று திமுக எதிர்ப்பு. திமுகவை பிடிக்காத ஒரு வாக்காளர், இந்த முறை அதிமுகவை விட்டு, ஏன் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்?
பதில்:
இந்த முறை பாஜகவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் மிகவும் வலுவாக உள்ளன. எங்களுக்கு கிடைக்கும் வாக்கு யாருக்கும் எதிராக கிடைக்கும் வாக்கு அல்ல. பாஜகவுக்கு ஆதரவான வாக்கு. நேர்மறையான வாக்கிற்கு அதிக பலம் உண்டு. இந்த அனைத்து விஷயங்களாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆதரவான, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது.

