Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து" - வைகோ கிண்டல்!

"நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து" - வைகோ கிண்டல்!

ரபரப்பான அரசியல் சூழ்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல்.

திருமாவளவன் நேற்று (07.07.2026) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 'தவெக ஆட்சி அமைக்கப் பெரும்பான்மைக்குத் தேவையான 2 இடங்​கள் பற்​றாக்​குறைய இருந்த​தால் ஆதரவு கோரி வி.சி.க.வுக்கு கடிதம் எழுதினர்.

இது குறித்து முடிவெடுக்கையில், அப்​போது விசிக வெளி​யில் இருந்​து​தான் ஆதரவு எனத் தெரி​வித்​தோம். அதன் பின்​னர் 10 நாட்​கள் கழித்​து​தான் த.வெ.க. அமைச்​சர​வை​யில் இடம்​பெற்​றோம். அதே​ சமயம் இன்​னும் திமுக கூட்​ட​ணி​யில் இருக்​கிறீர்​களா? என கேள்வி எழுப்பினால், ஆம் என்றுதான் சொல்ல முடியும்​: தி.மு.க. கூட்டணி​யில் இருப்​ப​தாகவே உணர்​கிறோம். இதுவே என் பதில் ஆகும். தற்​போது​ வரை த.வெ.க. கூட்ட​ணி​யில் விசிக இணைய அதி​காரப்​பூர்​வ​மாக எந்த நிகழ்​வும் நடை​பெற​வில்​லை.

தவெக கூட்​டணி தொடர்​பாக ஆதரவு கட்​சிகளின் ஆலோ​சனைக் கூட்​டம் ஜூலை 1-ம் தேதி முதல்​வர் விஜய் தலை​மை​யில் நடை​பெற்​றது. இருப்பினும் அந்​தக் கூட்​டத்​தில் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்​கப்பட​வில்​லை. எனவே த.வெ.க. தலை​மை​யில் இன்னும் கூட்​டணி அமைய​வில்லை என்​பது​தான் இன்​றைய நிலை' எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

கோப்புப்படம்

அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், 'த.வெ.க. அமைச்சரவையில் நாங்கள் (வி.சி.க.) இடம்பற்றி இருந்தாலும் ஸ்டாலினுடன் கருத்து பங்கேற்பில் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறோம்' என தொல். திருமாவளவன் கருத்தைப் பதிவு செய்துள்ளார். இதைப் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த வைகோ, 'நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து. நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து அவ்வளவுதான்' எனத் தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran