ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் உள்ள சமன் படக் அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் வாகனங்கள் மற்றும் கட்டிடங்களின் மீதும் தீ பரவியது. இதில் ரயில் ஒரு பெட்டி முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட பலூச் விடுதலை அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

