Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நேபாள பெருவெள்ளம் : உயிரிழப்பு எண்ணிக்கை 1,127ஆக அதிகரிப்பு!

நேபாள பெருவெள்ளம் : உயிரிழப்பு எண்ணிக்கை 1,127ஆக அதிகரிப்பு!

News7 Tamil 1 week ago

நேபாளத்தில் உள்ள ராசுவா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த 26ம் தேதி காலை சுமார் 8:30 மணியளவில் பனிப்பாறைச் சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், பாலங்கள், சாலைகள், கட்டிடங்கள், வாகனங்கள் என அனைத்தும் சேதமடைந்தன. வெள்ளப்பெருக்கு காரணமாக, வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ற 19 பாலங்களும், 40 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளும் சேதமடைந்துள்ளன.

இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, தமிழ்நாட்டில் இருந்து கைலாஷிற்கு சுற்றுப்பயணம் சென்று வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் 50க்கும் மேற்ப்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1127ஆக உயர்ந்துள்ளது. மேலும், 85 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் 320 வெளிநாட்டினர் உள்பட மொத்தம் 4,247 பேர் காணாமல் போய்யுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதுவரை 12,000 பேர் மீட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil