தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்ற கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இதற்கான பணிகளில் முதலமைச்சர் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக துறைவாரியாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று (8.7.2026) தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சமூக நீதித் துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன், தலைமைச் செயலாளர் சாய்குமார், இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அ.சித்திக், இ.ஆ.ப., சமூக நீதித் துறைச் செயலாளர் ந. சுப்பையன், இ.ஆ.ப. மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

