Dailyhunt
எம்பி சீட் தருவதாக ஏமாற்றினார் இபிஎஸ் என பிரேமலதா காட்டமாக பதிலடி

எம்பி சீட் தருவதாக ஏமாற்றினார் இபிஎஸ் என பிரேமலதா காட்டமாக பதிலடி

NewsTamil 24X7 3 weeks ago

விUவில் இருந்த தேமுதிகவுக்கு உயிர் கொடுத்தது அதிமுக தான் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருப்பவர் நான்காம் தர பேச்சாளரை போல் பேசக்கூடாது என்று பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணிக்கு தேமுதிக சென்றதால் இபிஎஸ் வயிற்றெரிச்சலில் பேசுவதாகவும், 2024ஆம் ஆண்டு எம்.பி. சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி எனவும் பிரேமலதா விஜயகாந்த் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

புதுக்கோட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியதாவது;

* அதிமுக உடன் ஒரு வென்டிலேட்டர் கட்சி கூட்டணியில் இருந்தது
* ICUவில் இருந்த தேமுதிகவிற்கு உயிர் கொடுத்தது அதிமுக

* இன்று அந்த வென்டிலேட்டர் கட்சியும் திமுக உடன் கைகோர்த்துவிட்டது
* அரை சதவீத வாக்கு வங்கி வைத்திருக்கும் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 சீட்

வென்டிலேட்டர் கட்சி என தேமுதிகவை விமர்சித்து இபிஎஸ் பேசி இருந்தார்.


திருவண்ணாமலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது;

* Ex முதல்வர் என்ற பொறுப்பில் இருப்பவர் நான்காம் தர பேச்சாளரை போல் பேசக்கூடாது
* திமுக கூட்டணிக்கு தேமுதிக சென்றதால் வயிற்றெரிச்சலில் பேசுகிறார் இபிஎஸ்
* இபிஎஸ்சின் நடவடிக்கையால் சொந்த கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர்

* மாநிலங்களவை சீட் தருவதாக ஏமாற்றினார் இபிஎஸ்
* மே 4க்கு பிறகு இபிஎஸ் ICUவுக்கு போகாமல் இருக்க வேண்டும்

* கூட்டணியில் இருந்தபோது தேமுதிகவின் அருமை தெரியவில்லை
* கூட்டணியை விட்டு வெளியேறிய வயிற்றெரிச்சலில் பொங்குகிறார் இபிஎஸ்
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Related Link

இபிஎஸ் விமர்சனமும் ஸ்டாலின் பதிலடியும்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: NewsTamil 24X7