Dailyhunt
மேட்டூர் அணை நீர்மட்டம் 105.58 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 105.58 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 105.49 அடியிலிருந்து 105.58 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு இரண்டாவது நாளாக வினாடிக்கு 2555 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 72.26 டி.எம்.சியாக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

#mettur #dam #water #level #increased #

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Punnagai