ஜிவி பிரகாஷ், க்ரித்தி கர்பந்தா நடித்த `ப்ரூஸ் லீ' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரசாந்த் பாண்டியராஜ்.
இப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் இவர் அடுத்தாக விமல், இனியா, பாலசரவணன் நடிப்பில் இயக்கிய `விலங்கு' வெப்சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதன் பிறகு சூரி, ஐஸ்வர்யா லெட்சுமி நடித்த `மாமன்' படத்தை இயக்கி அதுவும் பெரிய ஹிட்டானது.
இயக்குநராக பணியாற்றி வந்த பிரசாந்த் பாண்டியராஜ் தற்போது ஹீரோவாக களம் இறங்குகிறார். `வாரண்ட்' என்ற சீரிஸில் நாயகனாக நடித்துள்ளார் பிரசாந்த். பாலாஜி சக்திவேல், காளிவெங்கட், அருள்தாஸ், நம்ரத்தா எனப் பலரும் இந்த தொடரில் நடித்துள்ளனர். இதன் கதை திரைக்கதையை பிரஷாந்த் உடன் இணைந்து எழுதியுள்ள விக்னேஷ் நடராஜன் இத்தொடரை இயக்கியும் உள்ளார்.

