சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரம் மழை தொடரும் வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாளை நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. வரும் புதன்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

