தமிழ்நாட்டில் அறுவைசிகிச்சை மூலம் நடக்கும் பிரசவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாநிலத்தில் கடந்த 2021-22ஆம் ஆண்டு மொத்தமாக ஒன்பது லட்சத்து 11 ஆயிரம் பிரசவங்கள் நடந்த நிலையில், இதில் நான்கு லட்சத்து 32 ஆயிரம் பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23இல், ஒன்பது லட்சத்து 12 ஆயிரம் பிரசவங்கள் நடந்த நிலையில், இதில் நான்கு லட்சத்து 40 ஆயிரம் பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. 2023-24இல், மொத்தம் நடந்த எட்டு லட்சத்து 71 ஆயிரம் பிரசவங்களில், நான்கு லட்சத்து 32 ஆயிரம் பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
model imageஇதேபோல், 2024- 25இல் நடந்த எட்டு லட்சத்து ஆயிரம் பிரசவங்களில் நான்கு லட்சத்து 10 ஆயிரம் பிரசவங்கள், அறுவை சிகிச்சை மூலம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. 2021-22இல் அறுவை சிகிச்சை மூலம் நடந்த பிரசவங்களின் விகிதம் 47.4 சதவீதமாக இருந்த நிலையில், 2024-25இல் 51.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண்களின் உடல் எடை அதிகரிப்பு, கருவில் உள்ள குழந்தையின் சீரற்ற இதயத்துடிப்பு, சர்க்கரை நோய், தைராய்டு, ரத்தசோகை, ரத்த அழுத்தம், பிற இணை நோய்களால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படுவது ஆகியவையே, இதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சிசேரியன் பிரசவம் இவ்வளவு மடங்கு அதிகரித்துவிட்டதா? - ஐஐடி ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி!
