Dailyhunt
106 இடங்களில் தவிக்கும் விஜய் - சி.வி சண்முகம் தலைமையில்  40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு!

106 இடங்களில் தவிக்கும் விஜய் - சி.வி சண்முகம் தலைமையில் 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு!

Samayam Tamil 1 week ago

மிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்படுகிறது.

இதனால் தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் உருவாகியுள்ளது. இந்த சூழலில்தான் தவெக தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரிடம் அவகாசம் கோரியுள்ளார். அதோடு மட்டும் அல்லாது காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டுள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

பெரும்பான்மை இன்றி தவிப்பு!

இந்த சூழலில்தான் தவெகவின் தலைவர் விஜய் திருச்சி கிழக்குராஜினாமா செய்ய வேண்டும். மேலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்பட்சத்தில் சபாநாயகர் ஒட்டு செல்லாது. அப்படி இருக்கும்போது 106 இடங்கள் தவெகவிடம் இருக்கும்.

அப்படியிருக்கும்போது மெஜாரட்டி நிருபிக்க அதிமுகவுடன் கூட்டணியே சாத்தியம் என ஆலோசனை ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சி.வி. சண்முகம் ஆதரவு!

இந்நிலையில்தான் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் 40 எம் எல் ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை சத்யன் மறுப்பு!

இதற்கிடையில் இன்றையதினம் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்த பின் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் பேட்டி தமிழக வெற்றிக் கழகத்திற்கு தான் ஆட்சி அமைக்க வேண்டிய தேவை உள்ளது எனவும் தற்போது வரை அவர்கள் யாருக்கும் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பவில்லை அப்படி காங்கிரசுக்கு அனுப்பி இருந்தால் அந்த கடிதத்தை அவர்கள் காட்டட்டும் எனவும் பேசியுள்ளார்.

அதிமுக தரப்பில் யாரையும் தமிழக வெற்றி கழகம் தொடர்பு கொள்ளவில்லை எங்களிடம் யாரும் ஆதரவும் கேட்கவில்லை அப்படி ஆதரவு கேட்டால் கட்சி தலைமை முடிவு செய்யும் எனவும் அவர் கோரியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil