Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
25 நாட்கள் விஜய் பிரச்சாரம் - தவெகவின் தேர்தல் வியூகம் என்ன?

25 நாட்கள் விஜய் பிரச்சாரம் - தவெகவின் தேர்தல் வியூகம் என்ன?

Samayam Tamil 2 months ago

மிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல் முறையாக தேர்தலை சந்திக்க இருக்கிறார். ஆனால் அவர் முழு வீச்சில் மக்கள் பரப்புரையை நடத்த வேண்டும் என தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் தான் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நேற்றைய தினம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அவர் 25 நாள் மக்கள் பிரச்சாரம் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கட்சி தொடங்கிய விஜய் திமுகவை அரசியல் எதிரி என்றும் பாஜகவை கொள்கை எதிரி என்றும் முன்னிறுத்தி தனது பயணத்தை தொடங்கினார். மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற விஜய் தனது நட்சத்திர அந்தஸ்து மூலம் தொடர்ந்து தனது மக்கள் பலத்தை இங்கு இருக்கக்கூடிய பிராந்திய கட்சிகளுக்கு உணர்த்தி வந்தார்.

ஆனால் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடந்த கரூர் துயர சம்பவம் தமிழக வெற்றி கழகத்தை நீண்ட நாள் சட்டப் போராட்டத்திற்கு கூட்டி சென்றது. மேலும் அவரின் அரசியல் பிரச்சாரத்திற்கு ஒரு பெரும் முட்டுக்கட்டையாகவும் அது அமைந்தது. முறையான நிர்வாக மேலாண்மை இல்லாத காரணத்தால் கரூரில் விஜய் மக்கள் பரப்பரையின்போது 41 -பேர் மூச்சு திணறி, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.இந்த வழக்கு தற்போது சிபிஐ விசாரணையில் இருக்கிறது. விஜய் இதுவரை மூன்று முறை சிபி விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார்.

விஜய்க்கு ரோட் ஷோ நடத்த அனுமதி இல்லை எனவும் நீதிமன்றம் மறுத்து இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் கரூர் சம்பவங்களுக்கு இரண்டு மாதம் கழித்து தமிழக வெற்றிக் கழகம் இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போதுதான் விஜய் ஆங்காங்கே மக்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். கடைசியாக தஞ்சாவூரில் மக்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்த சூழலில் தற்போது தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும் மே நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

எனவே இந்த சூழலில் விஜய் எவ்வாறு மீதம் இருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் மக்கள் பிரச்சாரத்தை மேற்கொள்வார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தேர்தல் சமயத்தில் மிக முக்கியமானது பிரச்சாரங்கள் தான் ஆனால் விஜய் அதை செய்ய தவறுகிறார் என்ற பெரும் விமர்சனம் அவர் மீது எழுகிறது. ஆனால் ஏற்கனவே நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய் விடுபட்ட மாவட்டங்களை தான் முதல்வரான பிறகு வந்த சந்திப்பேன் என பேசியிருந்தது, விமர்சனமாக இருந்தது. இந்த சூழலில் விஜய் என்ன மாதிரியான நிலைப்பாட்டில் தனது பிரச்சார பயணத்தை வடிவமைப்பார் என்று கேள்வி எழுந்திருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil