Dailyhunt
'ஐபிஎல் 2026 முடிந்ததும்'.. சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே பங்கேற்கும் புதிய தொடர் நடைபெறும்: பிசிசிஐ திடீர் அறிவிப்பு!

'ஐபிஎல் 2026 முடிந்ததும்'.. சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே பங்கேற்கும் புதிய தொடர் நடைபெறும்: பிசிசிஐ திடீர் அறிவிப்பு!

Samayam Tamil 1 week ago

பிஎல் 2026 சீசன் முடிந்ததும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இளம் இந்திய வீரர்களை வைத்து டெஸ்ட் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

என்ன காரணம்? இந்திய அணியில், தற்போது ஒருநாள் மற்றும் டி20 பார்மெட் தான் சிறப்பாக இருக்கிறது. டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை என மூன்று தொடர்களிலும் இந்திய அணி கோப்பை வென்று அசத்தியிருக்கிறது. ஆனால், அதே நேரத்தில், டெஸ்டில் இந்திய அணி தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பி வருகிறது. இதனால், டெஸ்ட் பார்மெட்டை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஐபிஎல் முடிந்ததும் இளம் வீரர்கள் பங்கேற்கும், டெஸ்ட் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

பார்மில் இருக்க கூடிய 64 இளம் இந்திய வீரர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த 64 வீரர்களும் 25 வயதுக்கு உட்பட்ட வீரர்களாக இருக்க வேண்டும் என, வீரர்களை தேர்வு செய்யும் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமி நிர்வாகிகளுக்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இந்த அகடமியின் தலைவராக இருக்கும் விவிஎஸ் லக்‌ஷ்மன் கொடுத்த ஐடியாவால்தான், இந்த டெஸ்ட் தொடரை நடத்த உள்ளனர்.

வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே போன்றவர்களும் இத்தொடரில் ஆட உள்ளனர். ஒருவேளை, இத்தொடரில் ஆயுஷ் மாத்ரே, சூர்யவன்ஷி ஆகியோர் தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு ரன்களை குவித்தால், உடனே இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும்.

பிசிசிஐ அதிரடி முடிவு: இரண்டு மாதங்கள் நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரில், பேட்டிங்கில் அதிக ரன்களை அடிக்கும் டாப் 2 வீரர்களையும், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அதிக விக்கெட்களை எடுக்கும் டாப் 2 வீரர்களையும், உடனே டெஸ்ட் அணியில் சேர்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதனால், இத்தொடர் இளம் வீரர்கள் மத்தியில் பெரிய போட்டியாக மாறும்.

இந்திய டெஸ்ட் அணி, கடந்த ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 0-2 என்ற கணக்கிலும், 2024-ல் நியூசிலாந்துக்கு எதிராக 0-3 என்ற கணக்கிலும் தோல்வியை சந்தித்தது. இந்த இரண்டு தோல்விகளும் உள்நாட்டில் நிகழ்ந்தவை. இதனால்தான், டெஸ்ட் அணி மீது தற்போது பெரிய அளவில் கவனம் செலுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

டெஸ்ட் பார்மெட்டில் இனி, பார்மில் இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை உள்ளனர். முன்பெல்லாம், ஸ்டார் வீரர்கள் தொடர்ச்சியாக சொதப்பினாலும், அவர்களுக்கு அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், இனி டெஸ்ட் பார்மெட்டில், அதுபோன்ற ஒரு சலுகையை கொடுக்க முடியாது என்பதில் பிசிசிஐ உறுதியாக இருக்கிறது.

கேப்னடன் ஷுப்மன் கில், ஜஸ்பரீத் பும்ரா, ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் என எந்த ஸ்டார் வீரரும் தொடர்ச்சியாக சில போட்டிகளில் சொதப்பினாலோ அல்லது ஒரு தொடரில் சிறு தாக்கத்தை கூட ஏற்படுத்தவில்லை என்றாலும் உடனே அணியைவிட்டு தூக்க முடிவு செய்துள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2027-2029-ல் கோப்பை வெல்வதை இலக்காக வைத்து, தற்போது இருந்தே அணியை முழுவீச்சில் தயார் செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

தற்போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-207-ல் இந்திய அணி 48.15 சதவீத புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில்தான் இருக்கிறது. இம்முறை பைனலுக்கு முன்னேற வாய்ப்பு மிகமிக குறைவு என புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil