தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த ஐந்தாண்டுகள் செயலாற்றிய முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார்.
இது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது என்று தான் சொல்லவேண்டும். இந்நிலையில் இந்த தோல்வி குறித்து முக ஸ்டாலின் தனது சோஷியல் மீடியாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அவர் பதிவிட்டது என்னவென்றால், மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கின்றோம். வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினோம். மக்களுக்கான நல்லாட்சியை வழங்கினோம். தேர்தல் களத்தில் எங்களுடைய ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லியே வாக்குகள் சேகரித்தோம். பரப்புரையில் கூட சாதனைகளை சொல்லியே வாக்கு கேட்டோம். திமுக கூட்டணியை ஆதரித்து எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு என் நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்து தான் ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் நான் உண்மையாக இருந்தேன். என் மனசாட்சிப்படி செயல்பட்டேன். எனது சக்தியை மீறி உழைத்தேன்.என்னுடன் இணைந்து கடுமையாக உழைத்த அனைவருக்கும் என் நன்றியினை தெரிவிக்கின்றேன். எங்களுடன் தோழோடு தோல் நின்று பணியாற்றிய தோழமை கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றிகள்.
என் அரசியல் வாழ்க்கையில் பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே வெற்றி தோல்வியெல்லாம் என்னை பாதிக்காது. லட்சியமும் கொள்கையும் தான் எனக்கு முக்கியமே தவிர வெற்றி தோல்வி முக்கியமல்ல. எனவே திமுகவின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்கான சிறப்பான ஆளும்கட்சியான செயல்பட்ட திமுக இனி சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படும் என தெரிவித்தார் முக ஸ்டாலின்.
இந்நிலையில் முக ஸ்டாலினின் இந்த உருக்கமான பதிவு திமுக தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. திமுக தான் எப்படியும் வெற்றிபெறும் என அனைவரும் நம்பினார்கள். கடந்த முறையை விட இம்முறை மிகவும் நம்பிக்கையாக திமுகவினர் இந்த தேர்தலை எதிர்கொண்டார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக திமுக தோல்வியை சந்தித்தது.
குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் மக்களுக்காக பல நலத்திட்டங்களை செய்திருக்கின்றார் முக ஸ்டாலின். ஆனால் அந்த தொகுதியில் அவரே தோல்வியை சந்தித்தது தான் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக திமுகவினருக்கு உள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் முக ஸ்டாலின். அந்த ஆலோசனை முடிந்து திரும்பும் போது முக ஸ்டாலின் மிகவும் உருக்கமான தனது தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அந்த வீடியோவை பார்த்த திமுகவினர் உண்மையிலேயே கஷ்டப்பட்டனர். மிகவும் நம்பிக்கையாக தேர்தலை எதிர்கொண்ட திமுக தோல்வியை சந்தித்துவிட்டதே என அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் திமுக இதற்கெல்லாம் அசையாது, கண்டிப்பாக மீண்டும் புத்துணர்ச்சியுடன் செயல்படும். முக ஸ்டாலின் போராட்டத்தை கைவிடமாட்டார் என திமுகவினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை திமுகவின் கோட்டை என சொல்லிக்கொண்டு வரும் நிலையில் சென்னையில் மொத்தம் இரண்டே இரண்டு தொகுதியில் தான் திமுக வெற்றிபெற்று இருக்கின்றது. இதுபோல பல இடங்களில் திமுக அதிர்ச்சி தோல்வி அடைந்துவிட்டது. திமுக இத்தனை ஆண்டுகாலம் ஆதிக்கம் செலுத்தி வந்த தொகுதிகளில் எல்லாம் தவெகவினர் வெற்றிபெற்று அதிர்ச்சி கொடுத்துள்ளனர். குறிப்பாக சென்னையை தங்களது கோட்டையாக தவெக மாற்றி இருக்கின்றனர் என்றே சொல்லலாம்

