Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அரசியலில் மிகப்பெரிய துரோகி.. - எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக தாக்கிய ஓபிஎஸ்!

அரசியலில் மிகப்பெரிய துரோகி.. - எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக தாக்கிய ஓபிஎஸ்!

Samayam Tamil 2 months ago

தென்காசியில் திமுக நிர்வாகி ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசியவர்,பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் ஜெயலலிதா, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் மக்களால் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

அப்போது கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் கூச்சலிட்டபோது உங்களுடைய கோபம் நியாயமானது. ஏன் நான் அந்த நபரின் பெயரைக் குறிப்பிடப்படவில்லை என்றால், அந்த நபர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என்று ஓ பன்னீர்செல்வம் கூறினார்.

இன்று கூட்டத்தில் கொந்தளிக்கும் ஒரு பெரியவருடைய கோபம் தான் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மக்களிடமும் இருக்கின்றது.ஒரு நபரை முதலமைச்சர் என்று நிலை நிறுத்தியவரே, எந்த அளவுக்கு மரியாதைக் குறைவாக நடத்தினார் என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். அரசியலில் ஒரு மிகப்பெரிய துரோகி யார் என்று சொன்னால்.. அவர்தான் என்று எடப்பாடி பழனிச்சாமியை என் பெயரைக் குறிப்பிடாமல் கூறினார்.
50 ஆண்டுக்காலம் அதிமுகவை உருவாக்கிய இயக்கத்தை இன்று சின்னாபின்னமாகி உள்ளார்.

மேலும் அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி அபகரித்துக் கொண்டு, குறுக்கு வழியில் முதலமைச்சர் பதவியில் அமர்த்தியவரை மரியாதைக் குறைவாக நடத்தி, ஊர்ந்து ஊர்ந்து சென்று முதலமைச்சர் பதவியைப் பெற்று, அவரா எனக்கு முதலமைச்சர் பதவியைக் கொடுத்தார் என்று நன்றி உணர்வு கூட இல்லாமல் சொல்லும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமி தான் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகி மறு உருவம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அடிமைகளை வைத்துக்கொண்டு தலைமைச் செயலகத்தில், பொதுச் செயலாளராக வேண்டும் என்று அனைவரையும் பேச வைத்தார்.


கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராக தன்னுடைய பெயரை அறிவிக்க வேண்டும் என்று, நிர்வாகிகளிடம் பேச வைத்தார். நான் அப்போது மற்ற கட்சி நிர்வாகிகள் இடம் கூறினேன். கட்சிக்கும், மக்களுக்கும் கேடு செய்ய நீங்கள் முன்வந்துள்ளீர்கள் நீ சொன்ன போதும் அவர்கள் அதைக் கேட்கவில்லை.அப்போது அதிமுகவில் இருக்கக்கூடிய முக்கிய பிள்ளைகள் சிலர் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக இருந்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று கூறினர்.

ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற நாளிலிருந்து நாடாளுமன்றத் தேர்தல்,சட்டமன்றத் தேர்தல் ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகரத் தேர்தல் இடைத்தேர்தல் என சுமார் 11 தேர்தல்களில் அதிமுக கடும் தோல்வி அடைந்தது. அதிமுகவை எம்ஜிஆர் ஜெயலலிதாவும் எப்படி வழி நடத்தினார்கள் என்பது முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு கூட்டங்களில் பேசியிருக்கிறார் அது மட்டும் இன்றி நானும் எம்ஜிஆர் ரசிகன் தான் என்றும் கூறியிருக்கிறார்.


தொடர்ந்து 1967ல் அண்ணா தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைத் துடைத்து எரிந்தார்.தற்பொழுது வரை காங்கிரஸ் கட்சித் தமிழகத்தில் ஆட்சி அமைக்கவில்லை.இன்றைக்கு அதே நிலைமைத் தொடர்கிறது. திராவிட சித்தார்ந்தம், திராவிட இயக்கத்தை அகற்ற வேண்டும் என்று டெல்லியில் இருக்கக்கூடியவர்கள் வியூகம் வகுத்த நிலையில் அதனைக் கட்சியைக் காத்தவர் முதல்வர் ஸ்டாலின் தான் என்று கூறினார்.

இதனையடுத்து தமிழ்நாட்டின் சார்ப்பில் மத்திய அரசுக்கு 200 கோடி நிதி செல்கிறது. ஆனால் அந்த நிதியைக் கூட தமிழகத்திற்குக் கொடுப்பதில் மத்திய அரசு சிக்கல் கொடுத்து வருகிறது. ஆனால், அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு நிதியை மாநில அரசு நிதியில் இருந்து செயல்படுத்தி வரும் மாபெரும் தலைவர் ஸ்டாலின் தான் என்று ஓ.பன்னீ செல்வம் கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil