Dailyhunt
அரசு ஊழியர்களுக்கு 9 சதவீத அகவிலைப்படி உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு 9 சதவீத அகவிலைப்படி உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு!

Samayam Tamil 2 weeks ago

த்திய அரசு ஊழியர்களுக்கான 8ஆவது ஊதியக் குழு தொடர்பான விவாதங்களும் கோரிக்கைகளும் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் 5ஆவது மற்றும் 6ஆவது ஊதியக் குழு கட்டமைப்புகளின் கீழ் இன்னும் சம்பளம் அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை மத்திய அரசு திருத்தியுள்ளது.

7ஆவது ஊதியக் குழுவின் திருத்தத்துடன் ஒப்பிடும்போது, இந்த அகவிலைப்படி திருத்தங்கள் சதவீத அடிப்படையில் அதிகமாக உள்ளன.

5ஆவது மற்றும் 6ஆவது ஊதியக் குழு கட்டமைப்புகளுக்கான திருத்தப்பட்ட அகவிலைப்படி!

நிதி அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 6ஆவது மத்திய ஊதியக் குழுவின் திருத்தத்திற்கு முந்தைய ஊதிய விகிதம்/தர ஊதியத்தில் தொடர்ந்து ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி விகிதம் 2026 ஜனவரி 1 முதல் அடிப்படை ஊதியத்தில் தற்போதுள்ள 257 சதவீதத்திலிருந்து 262 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. மற்றொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 5ஆவது மத்திய ஊதியக் குழுவின் திருத்தத்திற்கு முந்தைய ஊதிய விகிதத்தில் தொடர்ந்து ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி விகிதம் 2026 ஜனவரி 1 முதல் அடிப்படை ஊதியத்தில் தற்போதுள்ள 474 சதவீதத்திலிருந்து 483 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

7ஆவது மத்திய ஊதியக் குழுவின் கீழ் இருந்த 2 சதவீத உயர்வுடன் ஒப்பிடுகையில், இந்த அகவிலைப்படி திருத்தம் 6ஆவது மத்திய ஊதியக் குழு ஊழியர்களுக்கு 5 சதவீத உயர்வாகவும், 5வது மத்திய ஊதியக் குழு ஊழியர்களுக்கு 9 சதவீத உயர்வாகவும் அமைகிறது.

PF உறுப்பினர்களுக்கு புதிதாக வரும் வெப்சைட் E-PRAAPTI.. அப்படி அதுல என்ன ஸ்பெஷல் இருக்கு?

ஊழியர்கள் ஏன் இன்னும் பழைய ஊதியக் குழுக்களில் உள்ளனர்?

7ஆவது ஊதியக் குழுவின் பதவிக்காலம் 2025 டிசம்பர் 31 அன்று முடிவடைந்தது. மேலும் அரசாங்கம் 8ஆவது ஊதியக் குழுவிற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. 7ஆவது ஊதியக் குழுவின் பதவிக்காலம் முடிவடைந்த போதிலும், 8ஆவது ஊதியக் குழு செயல்படுத்தப்படும் வரை அகவிலைப்படி கணக்கீடுகளுக்கு அதன் கட்டமைப்பு தொடர்ந்து பயன்படுத்தப்படும்.

5ஆவது, 6ஆவது ஊதியக் குழுக்களின் கீழ் வழங்கப்படும் ஊதியம்!

ஊழியர்கள் 7ஆவது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி பலன்களைப் பெற்று வரும் வேளையில், சில ஊழியர்கள் இன்னும் 5ஆவது மற்றும் 6ஆவது ஊதியக் குழுக்களின் கீழ் சம்பளம் அல்லது ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இதற்குக் காரணம் அனைத்து அரசு சார்ந்த நிறுவனங்களும் ஒரே நேரத்தில் ஊதியத் திருத்தங்களை ஏற்றுக்கொள்வதில்லை. பல தன்னாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மானியம் பெறும் நிறுவனங்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் சில ஓய்வூதியதாரர்கள் ஊதியக் குழுக்களைத் தாமதமாகப் பின்பற்றுகின்றனர்.

வங்கியில் வாங்கிய கடனை இப்படியெல்லாம் வசூல் செய்வார்களா? PF, PPF கணக்கில் உள்ள பணத்துக்கு பாதுகாப்பு இருக்கா?

திருத்தப்பட்ட அமைப்பு முறையாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை, அத்தகைய நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் பழைய கட்டமைப்புகளின் கீழ் தொடர்ந்து ஊதியம் பெறுவார்கள். சில ஓய்வூதியதாரர்கள், குறிப்பாக 2006 அல்லது 2016ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதிய மாற்றங்களில் முறைகேடுகளை எதிர்கொள்கின்றனர். இந்தப் பிரிவு ஓய்வூதியதாரர்கள் பழைய கட்டமைப்பின்படியே தொடர்ந்து பணம் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil