Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரியலாம்.. அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு பேட்டி !

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரியலாம்.. அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு பேட்டி !

Samayam Tamil 9 months ago

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி பகுதியில் நடந்த அதிமுக பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துக் கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடி அதிமுக கூட்டம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , முதன் முதலில் தேர்தல் களத்திற்கு வந்த இயக்கம் அது அதிமுக தான். ஏனென்றால் தேர்தலில் கூட்டணி கட்சிகளை நம்பி இருக்கும் சில கட்சிகளின் மத்தியில் , மக்களை நம்பி தேர்தலை சந்தித்த இயக்கம் அதிமுக. அதிமுகவின் தெய்வங்களாக அம்மா ஜெயலிதா மற்றும் எம்.ஜி. ஆர் உள்ளனர். இவர்கள் காட்டிய வழியில் முன்னாள் முதவரும் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.


எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

வரும் 2026 சட்டசபை தேர்தலுக்காக முதன் முதலில் தேர்தல் களத்திற்கு வந்த இயக்கம் அதிமுக. மக்கள் மன்றத்தை மட்டும் நம்பி இதுவரை 154 தொகுதிகளில் அதிமுக பொது செயலாளர் பழனிச்சாமி பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளார். மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. திமுகவுக்கும் த.வெ.க.வுக்கும் இடையே இரண்டாவது இடத்தை பிடித்து யார் எதிர்க்கட்சியாக வருவார்கள் என்று தான் போட்டி உள்ளது.அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமிதான் முதல்வர் என்பதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்று கூறினார்.


டிடிவி தினகரன் பற்றி எங்களுக்கு கவலை இல்லை

அப்போது டிடிவி தினகரன் விமர்சனம் குறித்த கேள்விக்கு , டிடிவி தினகரன் நிலைப்பாடு பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
நான்கு ஆண்டு காலம் நல்ல ஆட்சி கொடுத்த பழனிச்சாமியை மக்கள் முதல்வராக முடிவு செய்துவிட்டனர். நிழலின் அருமை வெயிலுக்குள் சென்றால்தான் தெரியும் என்பது போல அதிமுக ஆட்சியின் நன்மையை மக்கள் புரிய துவங்கி உள்ளனர் என்று கூறினார்.

திமுக காங்கிரஸ் கூட்டணி விமர்சனம்

திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும். காங்கிரஸ் தலைவர் செல்லப்பெருந்தகை திமுகவின் தவறை சுட்டிக்காட்டவில்லை. காங் மாவட்ட தலைவர் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை கொலையாளிகள் கண்டுபிடிக்கவில்லை. கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கவில்லை. அதையெல்லாம் கேட்காத செல்வபெருந்தகைக்கு அதிமுக பற்றி பேச அருகதை இல்லை.

காங்கிரஸ் கட்சியை திமுக விழுங்க பார்க்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். மேலும் அதை நிரூபணம் செய்யும் வகையில் காங்கிரஸ் மாவட்ட மகளிர் அணி தலைவியை திமுகவில் சேர்த்துள்ளனர். காங்கிரஸ்காரர்கள் எச்சரிக்கையாக இருந்தால் சரியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

அதிமுக - பாஜக கூட்டணி

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே அதிமுக பாஜகவுடனான கூட்டணியைப் முறித்துக் கொண்டது.பின்னர் தனியாக போட்டியிட்டத்தில் அதிமுக தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலுக்காக நீண்ட இழுப்பறிக்கு பிறகு அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பாஜக. ஆனாலும் கூட்டணிக்குள் தற்பொழுதுவரை இணக்கமான சூழல் நிலவி வருகிறது. மேலும் தமிழகத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முணைப்புடன் ஈடுப்பட்டு வருகிறது. மறுபுறம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி எம். எல்.ஏகள் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil